நாகை மாவட்டம் – செருநல்லூர் கிராமத்தில் கொள்கை குடும்பங்களை இல்லம் தோறும் சந்திக்கும் நிகழ்ச்சி!

Viduthalai
1 Min Read

செருநல்லூர், செப்.8- நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம், செருநல்லூர் கிராமத்தில் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 01.09.2024 அன்று மாலை 5.00 மணிக்கு தொடங்கி இல்லம் தோறும் இயக்க தோழர்களை, கொள்கை குடும்பங்களை சந்திக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இதில் மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.எ.நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ. புபேஸ்குப்தா, மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி, கீழ்வேளூர் ஒன்றிய தலைவர் பாவா.ஜெயக்குமார், மாநில சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் மு. இளமாறன், கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர் பாக்கியராஜ், மாவட்ட து. செயலாளர் துரைசாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் சு.ராஜ்மோகன், மாவட்ட மாணவர் கழக தலைவர் மு.குட்டிமணி, கீழ்வேளூர் ஒன்றிய து.தலைவர் அரங்கராசு, கீழ்வேளூர் ஒன்றிய அமைப்பாளர் பாஸ்கர், கீழ்வேளூர் இளைஞரணி பொறுப்பாளர் அன்பு மற்றும் கீழ்வேளூர் ஒன்றிய பொறுப்பாளர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

கழகத் தோழர்களின் இல்லம் தோறும் சென்று செப் – 17 அறிவுலக ஆசான் தந்தை பெரியார் பிறந்த நாள் – சமூக நீதி நாள் விழாவினை எழுச்சியோடு கொண்டாடுவது பற்றி கலந்துரையாடப்பட்டது,
செப் – 28 திருமருகலில் நடைபெற இருக்கும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் பட ஊர்வலத்தில் பங்கேற்க அழைப்பு கொடுக்கப்பட்டது. தோழர்கள் குடும்பம் குடும்பமாக பங்கேற்பதாக கூறி மகிழ்ந்தனர். இரவு 9.00 மணி வரை நடைபெற்ற இயக்கத் தோழர்களின் இல்லங்களுக்கே சென்று சந்திக்கும் நிகழ்ச்சியானது செருநல்லூர் கிராம மக்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *