சென்னை, செப்.6 தேசிய அறிவுசார் சொத்து விருதுக்கான ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகளை உயர் கல்வி நிறுவனங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் நேற்று (5.92024) அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: ‘நம்நாட்டில் ஒவ்வொரு நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான சிறப்பு அங்கீகாரத்தை வழங்க ஏதுவாக அறிவுசார் சொத்து விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகள் ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் பொது காப்புரிமைகள், வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக முத்திரைகளின் கட்டுப்பாட்டு அமைப்பு (சிஜிபிடிடிஎம்) மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து இந்த விருதுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், ஊழியர்கள் அறிவுசார் சொத்து விருது பெறுவதற்கான தங்கள் கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள் குறித்த முழு விவரங்களை சமர்ப்பிக்கலாம். அதில் தகுதியானவை தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படும்.அதன்படி, தேசிய அறிவுசார் சொத்து விருதுகள் வழங்கும் விழா டில்லியில் நடைபெற உள்ளது. தகுதியானவர்களுக்கு ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் விருதுகளை வழங்க இருக்கிறார். இதன்மூலம் கல்வி மற்றும் தொழில்துறை வட்டாரங்களின் நிலையும் மேம்படும். இதுசார்ந்த கூடுதல் விவரங்களை யுஜிசியின் வலைத்தளத்தில் (https://www.ugc.gov.in) சென்று அறிந்து கொள்ளலாம்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் இதய நோயாளிகளுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்க நவீன கருவி
சென்னை, செப்.6- சென்னையில் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் ரயில் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. நகரின் முக்கிய ரெயில் நிலையங்களான சென்டிரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ரயில்வே நிர்வாகம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையுடன் இணைந்து, சென்டிரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் இதய பிரச்சினைக்கு முதலுதவி சிகிச்சை செய்வதற்கான நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை 4-இல் உள்ள நிலைய கண்காணிப்பு அதிகாரி அலுவலகம் உள்ளிட்ட 6 இடங்களில் இந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.
இதேபோல, சென்டிரல் ரயில் நிலையத்தில் 7 இடங்களில் இந்த கருவி பொருத்தப்பட்டுள்ளது.
தானியங்கி வெளிப்புற டிபி பிரிலேட் டர் (ஏ.இ.டி.) என்று அழைக்கப்படும் இந்த கருவி, ரயில் நிலையத்திற்கு வரும் பயணிக்கு திடீரென இதய துடிப்பு அதிகரித்து மாரடைப்பு ஏற்படும் சூழ் நிலை ஏற்பட்டால் அவரின் இதய துடிப்பை சரிசெய்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல் வதற்கு முன்னதாக அளிக்கப்பட வேண்டிய முதலுதவி சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது.