ஈரோட்டில் தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது ஆண்டு பிறந்தநாள் 17.9.2024 கல்வி உரிமை மாநிலத்திற்கே – உரிமைமீட்புப் பேரணி நடத்த முடிவு

1 Min Read

ஈரோடு, செப்.6- ஈரோடு பெரியார் மன்றத்தில் 04.09.24 அன்று மாலை 6.00 மணியளவில் அனைத்துக்கட்சி மற்றும் அமைப்புகளின் கூட்டம் தி.மு.க மாநகர செயலாளர் மு. சுப்பிரமணியம், தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு த சண்முகம், ப.ரத்தினசாமி, நீரோடை நிலவன் ஆகியோர் முன்னிலையில் பெரியார் பிறந்தநாள் பேரணி நடத்துவது பற்றி கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கல்வி உரிமை – மாநிலத்திற்கே மீட்புப் பேரணி சிறப்பாக நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை, தமிழ்ப் புலிகள் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, கொங்கு விடுதலை புலிகள் கட்சி, சமூக நீதி மக்கள் கட்சி, ஜெய் பீம் மக்கள் கட்சி, அருந்ததியர் விடுதலை இயக்கம், புரட்சிகர இளைஞர் முன்னணி ஆகியவற்றைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துரையாற்றினர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், சி.பி. அய், சி.பி.அய்.எம். ஆகிய அமைப்புகள் பேரணியில் பங்குபெறுவதாக தொலைபேசியில்ஒப்புதல் அளித்தனர்.
பெரியார் படிப்பக வாசகர் வட்டம் தலைவர் கனிமொழி நடராசன் நூறு மகளிரோடு பேரணியில் கலந்து கொள்வதாகவும் செலவுக்கு ரூ 10,000 வழங்குவதாகவும் அறிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *