சென்னை, செப்.4- சுமார் 1.60 லட்சம் பேர் எழுதிய குரூப் 1 பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு முடிவு வெளியிடப் பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 90 இடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த ஜூலை 13ஆம் தேதி நடந்தது. மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் 797 தேர்வு மய்யங் களில் நடந்த இத்தேர்வை 1 லட்சத்து 59 ஆயிரத்து 973 பேர் மட்டுமே (67.14 சதவீதம் பேர்) எழுதினர். இந்த நிலையில் முதல்நிலை தேர்வுக்கான முடிவை டிஎன்பிஎஸ்சி 2.9.2024 அன்று வெளியிட்டது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில், “குரூப் 1 முதல்நிலை தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தேர்வுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் முதன்மைத் தேர்வுக்கு 1907 பேர் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.