கலியபெருமாள் மறைவு

1 Min Read

புவனகிரி, செப். 4- கடலூர் மாவட்டம் சிதம்பரம் கழக மாவட்டம் புவனகிரி பெரியார் பெருந்தொண்டர் கலிய பெருமாளின் இறுதி நிகழ்ச்சிகளில் கழகத் தோழர்கள் கலந்து கொண் டனர்
புவனகிரி கள்ளிக் காட்டு தெருவை சேர்ந்த கலியபெருமாள் (வயது 95). இவர் திராவிடர் கழகத்தில் தந்தை பெரியார் காலம் தொட்டு இன்று வரை இயக்கத்தோழ ராக இருந்து வந்தார்.

கழகம் நடத்திய அனைத்துப் போராட் டங்களிலும் கலந்து கொண்டவர்
கலியபெருமாள் உடல்நிலை சரியில்லாமல் கடந்த இரண்டு மாத காலமாக வீட்டிலேயே இருந்தார். 31.8.2024 அன்று மறைந்தார்.
செய்தி அறிந்து மாவட்ட கழக தலை வர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் தலைமையில் கழக சொற்பொழிவாளரும் மாவட்ட இணை செயலாளருமான யாழ்.திலீபன், மாவட்ட துணைத் தலைவர் மழலை கோ.வி.பெரியார்தாசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் நெடுமாறன், நகர செயலாளர் ராமலிங்கம், ஒன்றிய தலைவர் ராமதாஸ், பெரியார் பெருந்தொண்டர் ஆசிர் வாதம் ஆகியோர் கலந்து கொண்டு மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *