அத்துமீறுகிறது இலங்கை!

1 Min Read

தமிழ்நாடு மீனவர்களுக்கு ரூ.5 கோடி அபராதமாம்!
இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு, செப்.4 தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் கடந்த மாதம் 5-ஆம் தேதி 3 படகுகளில் மீன் பிடிக்க சென்றபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
அதோடு அதிக குதிரை திறன் கொண்ட இயந்திரங்களை பயன்படுத்தி மீன்வளங்களை அழிக்க முயன்றதாகவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு நேற்று (3.9.2024) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் மீனவர்களுக்கு ரூ.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா இந்திய மதிப்பில் சுமார் 42 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத்தை கட்ட தவறினால் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும், எஞ்சிய 10 மீனவர்களுக்கு நீதிமன்ற காவாலை நீடித்தும் இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *