மும்பையில் புறநகர் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒருவர் கைது

1 Min Read

அரசியல்

மும்பை, ஆக 8 – மும்பையில் புறநகர் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவித்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மும்பை காவல்துறை கட்டுப் பாட்டு அறைக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அழைப்பு விடுத்து மும்பை புறநகர் ரயிலில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப் போவதாக மிரட்டல் விடுத்தார். 

காவல்துறையினர் உடன டியாக அந்த மொபைல் எண்ணை வைத்து மிரட்டல் விடுத்த நபரின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்தனர்.

அந்த அழைப்பு மும்பையில் உள்ள ஜுகு பகுதியில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  காவல் துறையினர் அங்கு சென்று மிரட்டல் விடுத்த நபரைக் கைது செய்தனர். 

விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர் 25 வயது இளைஞர் என்பதும், அவர் பீகாரில் இருந்து 10 நாட்களுக்கு முன்புதான் மும்பைக்கு வந் துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.

அந்த நபர் காவல் துறை கட்டுப் பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்தபோது மது போதையில் இருந்ததாக கூறப் படுகிறது. 

காவல் துறையினர் வெடிகுண்டு மிரட்டல் விடுப் பதற்காக அவர் பயன்படுத்திய அலைபேசியை பறிமுதல் செய்து தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *