முதலமைச்சர் கடிதத்தின் எதிரொலி இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட 9 தமிழ்நாடு மீனவர்கள் விடுதலை

1 Min Read

சென்னை,ஆக.8 – தமிழ்நாட்டு மீன வர்களை இலங்கைக்கடற்படையினர் தாக்கி விரட்டுவதும், கைது செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தி ஒன்றிய அமைச்சருக்கு அண்மை யில் கடிதம் மூலம் வலியுறுத்தினார். இந் நிலையில், தற்பொழுது, இலங்கை கடற் படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ் நாட்டை சேர்ந்த 9 மீனவர்கள் விடுவிக்கப் பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் இருந்து கடந்த மாதம் 25-ஆம் தேதி கடலுக்கு சென்ற மீனவர்கள், கச்சத்தீவு- நெடுந்தீவுக்கு இடையே மீன் பிடித்து கொண்டிருந்த போது ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் 9 பேரை கைது செய்தனர். அவர்களை விடுவிக்க நட வடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் இன்று  (8.8.2023) காலை 9 மீனவர்களையும் விடுதலை செய்வதாக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, 9 மீனவர்களையும் தமிழ்நாடு அனுப்புவ தற்கான பணிகளை அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *