மூளைச்சாவடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் கொடை ஏழு பேர் மறுவாழ்வு பெற்றனர்

1 Min Read

சென்னை, ஆக.30- செங்கல்பட்டு மாவட் டம், ஊனமாஞ்சேரியைச் சேர்ந்த 35 வயது வாலிபர் ஒருவர், கடந்த 25ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். சிகிச்சை பெற்று வந்த அந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி 28.8.2024 அன்று இரவு மூளைச்சாவு அடைந்தார்.

இந்த நிலையில், மூளைச்சாவு அடைந்தவ ரின் உடல் உறுப்புகளை கொடை அளிக்க அவரது குடும்பத்தினர் முன் வந்தனர்.

இதையடுத்து, அவரது 2 சிறு நீரகங்கள்,கல்லீரல், நுரையீரல், கால் எலும்பு (பிபுலா), இதய வால்வுகள், சிறுகுடல் ஆகியவை கொடையாகப் பெறப்பட்டன. சிறு குடலை கொடையாகப் பெறுவது ராஜீவ்காந்தி மருத்துவமனை வரலாற்றிலேயே இதுவே முதன்முறை ஆகும். சிறுநீரகம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கும், நுரையீரல் மற்றும் சிறு குடல் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும். இதய வால்வு முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன.

இந்த உடல் உறுப்பு கொடையின் மூலம் 7 பேர் மறுவாழ்வு பெற்றனர். உறுப்பு கொடை செய்த வாலிபருக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணி ராஜன் மற்றும் மருத்துவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *