மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் பிறந்த நாளினையொட்டி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

1 Min Read

கல்லூரிகளுக்கு அழைப்புக் கடிதம் வழங்கப்பட்டது

மேட்டூர், ஆக.28 மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்த நாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி வரும் 29.8.2024 அன்று நடைபெற உள்ளது .
மாணவர்கள் பங்கு கொள்ள கீழ்க்கண்ட கல்லூரிகளில் அழைப்பு கடிதம் வழங்கப்பட்டது.
1. பத்மவாணி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, ஓமலூர்
2.ஏவிஎஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குப்பூர்.
3. சிறீ பாலமுருகன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, சாத்தப்பாடி
4.காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேச்சேரி.
5. சிறீ கைலாஷ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நங்கவள்ளி.
6. சிறீவித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இடைப்பாடி .
7. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேட்டூர் .
காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். செல்வகுமாரிடம் அழைப்புக் கடிதம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மேட்டூர் மாவட்ட கழக செயலாளர் ப. கலைவாணன். பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி. அன்புமதி. மேட்டூர் மாவட்ட ப.க. செயலாளர் சி.மதியழகன் ஆகியோர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *