கல்லூரிகளுக்கு அழைப்புக் கடிதம் வழங்கப்பட்டது
மேட்டூர், ஆக.28 மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்த நாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி வரும் 29.8.2024 அன்று நடைபெற உள்ளது .
மாணவர்கள் பங்கு கொள்ள கீழ்க்கண்ட கல்லூரிகளில் அழைப்பு கடிதம் வழங்கப்பட்டது.
1. பத்மவாணி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, ஓமலூர்
2.ஏவிஎஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குப்பூர்.
3. சிறீ பாலமுருகன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, சாத்தப்பாடி
4.காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேச்சேரி.
5. சிறீ கைலாஷ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நங்கவள்ளி.
6. சிறீவித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இடைப்பாடி .
7. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேட்டூர் .
காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். செல்வகுமாரிடம் அழைப்புக் கடிதம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மேட்டூர் மாவட்ட கழக செயலாளர் ப. கலைவாணன். பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி. அன்புமதி. மேட்டூர் மாவட்ட ப.க. செயலாளர் சி.மதியழகன் ஆகியோர் பங்கேற்றனர்.