விருதுநகர் அரசு அலுவலகத்தில் பணி வாய்ப்பு

1 Min Read

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் வெளிப்பணி நிறுவனம் மூலம் (Outsourcing-HR Agency) பணி அமர்வு செய்திடும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த பணியிடங்கள் முற்றிலும் பெண் விண்ணப்பதாரர்களால் நிரப்பப்பட இருக்கின்றன . இதற்கான கல்வித் தகுதி , எப்படி விண்ணப்பிப்பது ? யார் விண்ணப்பிக்கலாம் ? உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம் .
சமுதாய அமைப்பாளர்
காலியிடங்கள்: 08
ஊதியம்: மாதம் ரூ.14,000 முதல் ரூ.16,000 வரை
கல்வி தகுதி: ஏதேனும் ஓர் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
கணினி இயக்கத்தில் அடிப்படை தகுதிகள் பெற்றெடுத்தல் வேண்டும். தகவல் தொடர்பில் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்த வராகவும் 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
எப்படி விண்ணப்பிக்கலாம்?
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பங்களை நகர்ப்புற வாழ்வாதார மய்யத்தில் நேரடியாகவோ அல்லது https://virudhunagar.nic.in/ என்ற வலைதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நகர்ப்புற வாழ்வாதார மய்யத்தில் 05.09.2024 தேதி மாலை 5.45 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *