கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

28.8.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* டில்லி மதுபான கொள்கை வழக்கில் பிஆர்எஸ் மூத்த தலைவர் கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் பிணை: அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு நீதிபதிகள் கண்டனம்
தி டெலிகிராப்:
* வரி பயங்கரவாதம் என்பது பா.ஜ.ஆட்சியின் ஆபத்தான முகம். நடுத்தர வர்க்க மக்களின் வருமானத்தின் மீது இன்று இந்தியாவில் வரிச்சுமை சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் ஊதியம் பல ஆண்டுகளாக அதிகரிக்கவில்லை. பிரதமர் மோடி தனது நண்பர்களின் செல்வத்தை காப்பாற்றவும், அதிகரிக்கவும் இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தின் முதுகை உடைக்கிறார் ராகுல் காந்தி குற்றச்சாட்டு
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ரயில்வே வாரியத்தின் தலைவராக சதீஷ் குமார் நியமனம். 119 ஆண்டு கால வரலாற்றில் இவர் இந்த அமைப்பின் தலைவராக இருக்கும் முதல் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் ஆவார்.
* ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் பாது காப்பு அதிகரிப்பு. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு இணையாக இசட் பிளஸில் இருந்து மேம்பட்ட பாதுகாப்பு இணைப்பாக (ஏஎஸ்எல்) மேம்படுத்தப்பட்டுள்ளது
* புதிய கருத்துக் கணிப்பில் ‘தேசத்தின் மனநிலை’யில் மாற்றம். 49% மோடிக்கு ஆதரவு. இது 5-6 மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட ஆறு சதவீத புள்ளிகள் குறைந்துள்ளது. ராகுலுக்கு ஆதரவு 9% அதிகரித்துள்ளது.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *