“நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்” சிராக் பஸ்வான் வலியுறுத்தல்

1 Min Read

புதுடில்லி, ஆக.28- நாடு முழுவதும் ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஒன்றிய அமைச்சரும் லோக் ஜன சக்தி (ராம் விலாஸ் அணி) கட்சியின் தலைவருமான சிராக் பஸ்வான் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர், “நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வேண்டும் என்பதில் எங்களது லோக் ஜன சக்தி உறுதியாக உள்ளது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் வகுக்கும் பல்வேறு திட்டங்கள் மூலம் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்கள் முன்னேற வேண்டுமென்பதே பிரதான நோக்கமாக அமைந்துள்ளது.

அந்த மாதிரியான சூழலில் ஜாதி அடிப்படியிலான மக்கள் தொகை விவரம் அரசுக்கு அவசியம் தேவை. அதன் மூலம் உரிய தொகையை ஒதுக்கீடு செய்ய முடியும் என நம்புகிறோம்” என அமைச்சர் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அரசுத் துறை களின் செயலாளர்கள் பதவி களுக்கான நேரடி நியமனம் (‘லேட்டரல் என்ட்ரி’) தொடர் பாகவும் தனது எதிர்ப்பை அவர் தெரிவித் திருந்தார். மேலும், இது தனக்கு கவலை அளிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஒன்றிய அரசுக்கு கூட்டணிக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து கண்டனம் வலுக்க நேரடி நியமனத்தை அரசு ரத்து செய்தது. இந்நிலையில் சிராக் பஸ்வான் இப்போது ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்திப் பேசியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *