கோவை விமான நிலைய விரிவாக்கம் 472 ஏக்கர் நிலத்தை ஒன்றிய அரசிடம் ஒப்படைத்தது தமிழ்நாடு அரசு

viduthalai
3 Min Read

கோவை, ஆக.26–– கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்காக 472 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் ஒப்படைத்தது.

கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தித் தர வேண்டும் என பல ஆண்டுகளாக ஒன்றிய அரசு கேட்டுவந்தது. 2010-ல் திமுக ஆட்சியில் இருந்தபோது கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்காக நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை அறிவித்தது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் எடுக்க நிதி ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டார்.

ரூ.2,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதை அடுத்து நிலம் கையகப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்காக 472 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் ஒப்படைத்தது. கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு 632 ஏக்கர் தேவை என விமான போக்குவரத்து ஆணையம் கேட்டிருந்த நிலையில் நிலம் ஒப்படைக்கப்பட்டது. எந்தவித நிபந்தனையும் இன்றி 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் நிலத்தை ஒப்படைத்தது. தமிழ்நாடு அரசு நிலத்தை ஒப்படைத்துள்ளதால் விரைவில் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை விமான நிலையம் விரிவுபடுத்தப்பட்டால் பன்னாட்டு விமானங்களை இயக்குவது அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பல்வேறு நாடுகளுக்கு நேரடி விமான சேவை தொடங்கப்படும் என்பதால் பெரிதும் உதவியாக இருக்கும் என தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் முடியும்போது தற்போதுள்ள 9,500 அடி நீளமுள்ள ஓடுபாதை 12,500 அடியாக அதிகரிக்கும். திமுக அரசு பொறுப்பேற்றது முதலே விமான நிலைய விரிவாக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறது. மதுரைக்கு பன்னாட்டு விமான நிலைய தகுதி வழங்க வேண்டும் என ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது.

இதனிடையே தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகளை தொகுதி மக்களவை உறுப்பினரான கனிமொழி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விரிவாக்க பணிகள் முடிந்தவுடன் தமிழ்நாட்டின் 2ஆவது பெரிய விமான நிலையமாக தூத்துக்குடி மாறும். விரிவாக்க பணிகள் முடிவடைந்தால் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து இரவு நேரத்திலும் விமானங்கள் இயக்கப்பட வாய்ப்பு உள்ளது. தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம் மூலம் அந்த மாவட்டம் மட்டுமின்றி, குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களும் பயன்பெறும்.

தூத்துக்குடியில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படும் நிலையில் விமான நிலைய விரிவாக்கம் தொழில்துறையினருக்கு உதவும் என்று கூறப்படுகிறது.

வா்த்தக ரகசியங்களை
திருடியதாக குற்றச்சாட்டு
இன்ஃபோசிஸ் மீது காக்னிஸன்ட் வழக்கு!

தமிழ்நாடு

நியூயார்க், ஆக.26- வா்த்தக ரகசியங்களை திருடியதாக இன்ஃபோசிஸ் நிறுவனம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் காக்னிஸன்ட் நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் இன்ஃபோசிஸ் மற்றும் காக்னிஸன்ட் நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. இந்நிலையில், காக்னிஸன்டின் துணை நிறுவனமான ட்ரைஸெட்டோவின் வா்த்தக ரகசியங்கள் மற்றும் மருத்துவ காப்பீட்டு மென்பொருள் தொடா்பான தகவலை சட்டவிரோதமாக இன்ஃபோசிஸ் திருடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடா்பாக அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் இன்ஃபோசிஸ் மீது ட்ரைஸெட்டோ வழக்கு தொடுத்துள்ளது. எனினும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள இன்ஃபோசிஸ் நிறுவனம், தனது தரப்பு நியாயத்தை நீதிமன்றத்தில் எடுத்துரைக்கும் என்று தெரிவித்துள்ளது.

இன்ஃபோசிஸ் மேனாள் நிா்வாகியான ராஜேஷ் வாரியா், காக்னிஸன்ட் நிறுவனத்தின் இந்திய கிளைத் தலைவா், நிா்வாக இயக்குநா் மற்றும் உலகளாவிய செயல்பாடுகளின் தலைவா் ஆகிய பொறுப்புகளில் அண்மையில் நியமிக்கப்பட்டாா்.

அதேவேளையில், காக்னிஸன்ட் தலைமை செயல் அதிகாரியாக உள்ள ரவிகுமாா், 20 ஆண்டுகள் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணியாற்றியவா். கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2022-ஆம் ஆண்டு அக்டோபா் வரை, இன்ஃபோசிஸ் தலைவராக அவா் பதவி வகித்தாா். இந்நிலையில், இன்ஃபோசிஸ் மீது காக்னிஸன்டின் துணை நிறுவனமான ட்ரைஸெட்டோ வழக்கு தொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *