100 நாள் வேலை திட்டம்.. ஒன்றிய பிஜேபி அரசால் குளறுபடிகள்

1 Min Read

சென்னை, ஆக. 24- 100 நாள் வேலைத் திட்டத்திலிருந்து பல்வேறு காரணங்களால் 23,64,027 பயனாளிகளை நீக்கி உள்ளது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டில்தான் பலர் நீக்கப்பட்டு உள்ளனர்.. அதிகபட்சமாக தமிழ்நாட் டில் 6,19,310 பயனாளிகள் நீக்கப்பட்டு உள்ளனர்.
100 நாள் வேலை திட்டம் நாடு முழுக்க கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் இதற்கு ஒதுக்கப்படும் நிதி அளவும் பெரிய அளவில் சரிவை சந்தித்து உள்ளது. 100 நாள் வேலை திட்டம் ஒரு காலத்தில் இந்தியாவை மிகப்பெரிய பொருளாதார சரிவில் இருந்து மீட்டது. மக்கள் கையில் பணம் புரண்டதன் காராணமாக இந்தியாவின் பொருளாதார சரிவு பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த 100 நாள் வேலை திட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. பல நாட்கள் வேலை இருப்பது இல்லை. அதற்கும் முறையான சம்பளம் இல்லை, போதிய நிதி ஒதுக்கீடு இல்லை என்று மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில்தான் 100 நாள் வேலைத் திட்டத்திலிருந்து பல்வேறு காரணங்களைச் சொல்லி 23,64,027 பயனாளிகளை நீக்கி உள்ளது ஒன்றிய அரசு. அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 6,19,310 பயனாளிகள் நீக்கப்பட்டு உள்ளனர்.
இதன் மூலம் தமிழ்நாட்டில் 100 நாள் வேலை பார்க்கும் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக பீகாரில் பலர் நீக்கப்பட்டு உள்ளனர். பீகாரில் 4,56,004 பயனாளிகள் நீக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் சத்தீஸ்கரில் – 3,36,375 பயனாளிகள் நீக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் அதிக பேரை நீக்கியுள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் வெளியிட்டு உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மய்யத்தின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் (MGNREGS) இருந்து எட்டு கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள் நீக்கப் பட்டுள்ளனர், 2022-2023 நிதியாண்டில் 20.47 சதவீதம் பேர் நீக்கப் பட்டுள்ளனர். இது கடந்த அய்ந்து ஆண்டுகளில் இல் லாத அளவு நீக்கம் இது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *