காரைக்கால் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

Viduthalai
1 Min Read

காரைக்கால், ஆக. 24- காரைக்கால் மாவட்ட திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 18/08/2024 அன்று மாலை 6 மணியளவில் காரைக்கால் மாவட்ட தலைவர் குரு.கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும். பொதுக்குழு உறுப்பினர் பதி.ஜெய்சங்கர். மாவட்ட இளைஞரணி தலைவர் மு.பி.பெரியார் கணபதி. மாவட்ட இளைஞரணி செயலாளர் லூயிஸ்பியர் முன்னிலையிலும்,மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி கருத்துரையாற்றினார்.
மாவட்ட செயலாளர் பொன்.பன்னீர்செல்வம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தார்
நிகழ்வில் மாவட்ட மாணவர் கழகத் தலைவர் அறிவுச்செல்வன். மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் மு.க.ஸ்டாலின். அறிஞர் அண்ணா கல்லூரி மாணவர் அ.எடிசன். இரா. இராமலிங்கம். ச.பன்னீர்செல்வம் சசிகுமார் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

கூட்டத்தில், காரைக்கால் நிரவி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும். பெரியார் பெருந்தொண்டர் கழக காப்பாளர் ஜெயபாலன் மறைவுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கத்தையும் தெரிவிக்கிறது எனவும், உலகத் தலைவர் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்த நாள் விழுவை காரைக்காலில் மிகுந்த எழுச்சியோடும் பெரியார் பட ஊர்வலம்,
பொதுக்கூட்டம் நடத்துவது எனவும், பெரியார் பிறந்த நாள் விழாவையொட்டி காரைக்கால் மாவட்டம் முழுவதும். சுவரெழுத்து, விளம்பர பதாகைகள் வைப்பது எனவும். ஆகஸ்ட் 4இல் கும்பகோணத்தில் நடைபெற்ற தலைமை கழக பொதுக்குழு கூட்ட தீர்மானத்தினை ஏற்று நிறைவேற்றுதல் எனவும், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா.

பெண்ணுரிமை காப்பு மூடநம்பிக்கை ஒழிப்பு இந்திய அரசியல் சட்டம் 51 A (h) பிரச்சார பொதுக்கூட்டம் மிக சிறப்பாக நடத்துவது எனவும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கனவு திட்டமும், அனைவரின் எதிர்பார்ப்புமான பெரியார் உலகத்திற்கு காரைக்கால் மாவட்டம் சார்பாக இரண்டாவது கட்டமாக மிகவும் கூடுதலான தொகையை கொடுப்பது எனவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *