ஹிந்திக்கு எதிரான போராட்டம் தொடங்கிய இந்நாளில் (10.8.1948) இனமானப் பேராசிரியருக்கு சிலைத் திறப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Viduthalai
1 Min Read

சென்னை, ஆக.10- தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமாகிய மு.க.ஸ்டாலின் இன்று (10.8.2023) வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

ஆகஸ்ட் 10 – ஆதிக்க ஹிந்திக்கு எதிராக 1948 ஆம் ஆண்டு மொழிப்போராட்டம் தொடங்கிய நாள் இன்று. வரலாற்றில் இரண்டாவது மொழிப் போராட்டத் தொடக்க நாளாகவும் பதிவாகி உள்ளது. 

இனமானம் காக்கவும் – மொழி உரிமையை நிலைநாட்டவும் எந்நாளும் உழைத்த இனமானப் பேராசிரியப் பெருந்தகையின் முழு உருவச் சிலையை சென்னை நுங்கம்பாக்கத்தில் அவரது பெயரால் அமைந்துள்ள கல்வி வளாகத்தில் இன்று திறந்து வைத்தேன். பேராசிரியப் பெருந்தகையின் சிலை அமைக்கப் பொருத்தமான இடமும் – பொருத்தமான நாளும் இதைத் தவிர வேறு இருக்க முடியாது.  கல்வியில் – பகுத்தறிவில் – சுயமரியாதை உணர்வில் சிறந்த தமிழ்நாட்டைக் கட்டி எழுப்ப பேராசிரியப் பெருந்தகை சிலை முன்பு உறுதி ஏற்கிறோம்.

-இவ்வாறு அப்பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாவிலன் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *