இவர்கள் தான் தேசத்தைக் காப்பவர்கள் மாநகராட்சியின் இரும்புக் கம்பிகளை திருடிய பா.ஜ.க. வார்டு கவுன்சிலர் கைது

1 Min Read

கடலூர், ஆக. 10 இரும்புக் கம்பிகளை திருடிய பாஜக கவுன்சிலர் உள்பட 10 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பான்பரி மார்க்கெட் மிகவும் பழைமையானது. இங்கு உள்ள கடைகளை இடித்து விட்டு புதிதாக கடைகள் கட்ட மாநக ராட்சி சார்பில் முடிவு எடுக்கப்பட்டது. தற்போது அங்குள்ள கடைகள் இடிக் கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அங்கிருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப் புள்ள இரும்புப் பொருட்கள் திடீரென காணாமல் போனது. இது குறித்து கடலூர் செம்மண்டலம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் துறையினர் கடலூர் மாநகராட்சி 28ஆவது வார்டு பாஜக கவுன்சிலர் சக்திவேல் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *