நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு பாகுபாடு காட்டுகிறது கருநாடக முதலமைச்சர் சித்தராமையா குற்றச்சாட்டு

1 Min Read

பெங்களூரு, ஆக. 17- நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு பாகு பாடு காட்டுவதாக கரு நாடக முதலமைச்சர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார். கரு நாடகாவில் நடந்த சுதந்திர நாள் விழாவில் அம்மாநில முதலமைச்சர் கொடியேற்றினார்.

பின்னர் உரையாற்றிய அவர் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக் குவதில் பாரபட்சம் காட்டுகிறது.
அரசமைப்பு கோட் பாடுகளை ஒன்றிய அரசு புறக்கணிக்கிறது.

மக்கள் தீர்ப்புக்கு எதிரான கொல்லைப்புற அரசியலை மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள். சமூக நலத் திட்டங்களை மாநில அரசுகள் செயல்படுத்தும்போது தேவையான நிதியை வழங்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை. ஒன்றிய அரசிடம் இருந்து தங்களுக்கு வர வேண்டிய நிதிக்காக மாநிலங்கள் நீதிமன்றங்களை நாடும் நிலை உள்ளது. மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தால்தான் நாடு வளர்ச்சி பெறும் என்பதை ஒன்றிய அரசு புரிந்துகொள்ள வேண்டும். மாநிலங்கள் வளர்ச்சிக்காக ஒன்றிய அரசு நியாயமான நிதியை ஒதுக்க வேண்டும். மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் ஒன்றிய அரசு பாகுபாடு காட்டுகிறது. நாட்டின் ஜனநாயகம் யாருடைய கைகளிலும் இருக்கும் பொம்மை அல்ல என்று கடந்த மக்களவை தேர்தலில் மக்கள் தீர்ப்பளித்து உள்ளனர் என்று கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *