அரசுப் பணத்தை எடுத்து தனியாருக்கு கடன் கொடுத்த வங்கி நிர்வாகம் கருநாடகத்தில் மூட உத்தரவிட்ட சித்தராமைய்யா

viduthalai
2 Min Read

பெங்களூரு, ஆக்.16 எஸ்பிஐ, பிஎன்பி வங்கிக் கணக்குகளை மூட கருநாடக அரசு உத்தரவிட்டதை அடுத்து பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தது பிஎன்பி.
இந்தியன் ஸ்டேட் வங்கி (எஸ்பிஅய்) மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைத்திருக்கும் கணக்குகளை மூடிவிட்டு வைப்புத் தொகைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என உத்தர விட்டு அரசுத் துறைகளுக்கு கருநாடக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மாநில அரசின் இந்த உத்தரவால் வங்கி பரிவர்த்தனை வெகுவாக பாதிக்கப்படும் என்ற அச்சகத்தை தொடர்ந்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமூக தீர்வுகாண பஞ்சாப் நேஷனல் வங்கி முயற்சி மேற்கொண்டு வருகிறது.
கருநாடக முதலமைச்சர் சித்தரா மையாவின் அறிவுறுத்தலின் பேரில் நிதித்துறை செயலாளர் வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பில் மேற்படி வங்கிகளில் இனி எந்தவிதமான வைப்புத் தொகைகளும் வைக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

14-9-2021 தேதியில் பஞ்சாப் நேஷனல் வங்கி, ராஜாஜிநகர் கிளையில் கருநாடக தொழில்துறை பகுதி மேம்பாட்டு வாரியம் ரூ. 25 கோடிக்கான ஓராண்டு வைப்பு நிதியை செலுத்தியது.

அதற்காக ரூ. 13 கோடி மற்றும் ரூ. 12 கோடி என இரண்டு தனித்தனி ரசீதுகளை அந்த வங்கி வழங்கியுள்ளது. இதில் ரூ. 13 கோடிக்கான தொகை முதிர்வு தேதிக்குப் பின் கருநாடக அரசு வாரியத்தின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்பட்டது.

ஆனால், ரூ. 12 கோடிக்கான வைப்புத் தொகையை வங்கி அதிகாரிகள் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது, மேலும், இது தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. அதேபோல் கருநாடக மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், அப்போதைய ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், அவென்யூ ரோடு, பெங்களூரு வங்கியில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ. 10 கோடியை ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்துள்ளது.

ஆனால், இந்த தொகை முதிர்வு தேதிக்கு முன்பே போலி ஆவணங்கள் மூலம் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு கடனாக அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எஸ்.பி.அய். மற்றும் பி.என்.பி. வங்கிகளின் இந்த முறையற்ற நடவடிக்கைக்கு தீர்வு கிடைக்காமல் உள்ளதை அடுத்து அந்த வங்கிகளில் உள்ள கணக்குகளை முடக்க கருநாடக அரசு முடிவெடுத்துள்ளது.

இதனையடுத்து மாநில அரசுத் துறைகள், பொது நிறுவனங்கள், பெருநிறுவனங்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் வைப்புத் தொகைகளை உடனடியாக திரும்பப் பெறுவும் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் உள்ள கணக்குகளை மூடுவும் தவிர இந்த வங்கிகளில் எந்த வகையான முதலீடும் செய்யக்கூடாது என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்காக செப்டம்பர் 20ம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ள நிலையில் இதுதொடர்பாக அரசுத் துறைகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவும் அறிவு றுத்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *