புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டை அகழாய்வில் காணப்பட்ட வட்டச் சுவர்கள்

Viduthalai
1 Min Read

அரசியல்


புதுக்கோட்டை,ஆக.11-
புதுக்கோட்டை மாவட் டம் பொற்பனைக்கோட் டையில் உள்ள வட்டக் கோட்டையின் மய்யத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் வட் டச் சுவர்கள் தென்பட் டுள்ளது.

பொற்பனைக் கோட் டையில் சங்க காலத்தைச் சேர்ந்த வட்டக் கோட்டை, கொத்தளம் இருந்ததற் கான கட்டுமானம் உள் ளது. இதேபோல, கோட் டையின் உள் மற்றும் வெளிப் பகுதிகளில் அகழி உள்ளது. இங்கு, தொல் லியல் துறை சார்பில் கடந்த மே மாதம் தொடங்கி அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தலா 15 அடி நீள, அகலத்தில் 13 இடங்களில் அகழாய்வுப் பணி நடை பெற்று வருகிறது. இது வரை, தங்க மூக்குத்தி, பல்வேறு விதமான பானை ஓடுகள், கண் ணாடி வளையல்கள் உள் ளிட்ட பல்வேறு விதமான தொல்பொருட்கள் கண் டெடுக் கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அகழாய்வுப் பணி நடை பெற்று வரும் ஒரு குழியில் சுமார் ஒரு அடி ஆழத்தில் வட்ட வடிவிலான சுவர் தென்பட்டுள்ளது. அடுத் தடுத்து 4 வட்டச் சுவர்கள் காணப்படுகின்றன. இவை எதற்காக கட்டப் பட்டிருக்கலாம் என்பதை உடனடியாக கண்டு பிடிக்க முடியவில்லை.

தொடர்ந்து, அகழாய் வுப் பணி மேற்கொள்ள ப்பட்டால்தான் எதற்காக கட்டப்பட்ட சுவர்கள் என்பது தெரியவரும் என தொல்லியல் ஆய்வாளர் கள் கூறுகின்றனர்.

பெரும்பாலான குழிகளில் செங்கல் கட்டு மானம் தென்பட்டாலும், அவை ஒழுங்கற்று காணப் படுகின்றன. எனினும், ஒரு குழியில் மட்டும் முறை யான தோற்றத்தில் இருப் பது குறிப்பிடத்தக்கது. 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *