மாநிலங்களவை இடைத்தோ்தல் தெலங்கானாவில் காங்கிரஸ் வேட்பாளர் அபிஷேக் சிங்வி போட்டி

viduthalai
1 Min Read

புதுடில்லி, ஆக. 15– மாநிலங் களவை தோ்தலில் தெலங்கானாவில் இருந்து காங்கிரஸ் சார்பில் அக் கட்சியின் மூத்த தலைவா் அபிஷேக் சிங்வி போட்டியிடுவார் என நேற்று (14.8.2024) அறிவிக்கப்பட்டது.

தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) மாநிலங்களவை உறுப்பினரான கே.கேசவ் ராவ், பதவி விலகி காங்கிரஸில் இணைந்தார். அதேபோல, ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் நாடாளுமன்ற உறுப் பினர் பாஜகவில் சேர்ந்தார்.

இந்த இருவரின் இடங்கள் உள்பட 9 மாநிலங்களில் உள்ள 12 மாநிலங்களவை இடங்களுக்கு செப் டம்பா் 3-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, தெலங்கானாவிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட வேண்டிய மாநிலங்களவை இடத்துக்கு காங்கிரஸ் சார்பில் அபிஷேக் சிங்வி போட்டியிடுவார் என அக்கட்சியின் தேசிய தலைவா் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்தார்.

தோல்வியிலிருந்து ‘மீண்டும் போட்டி: முன்னதாக, நிகழாண்டு தொடக்கத்தில் காங்கிரஸ் ஆட்சி யிலுள்ள இமாசல பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை தோ்தலில் போட்டியிட்ட அபிஷேக் சிங்வி தோல்வியுற்றார்.

68 உறுப்பினா்களைக் கொண்ட இமாசல பிரதேசத்தில் காங்கிரஸின் பலம் 40-ஆக இருந்தது. எனினும், காங்கிரஸைச் சோ்ந்த ஆறு அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள், 3 சுயேச் சைகள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்ததால் அக்கட்சியின் வேட்பாளா் ஹா்ஷ் மகாஜன், அபிஷேக் சிங்வி ஆகிய இருவருக்கும் சமமாக 34 வாக்குகள் கிடைத்தன. பின்னா், குலுக்கல் முறையில் பாஜக வேட்பாளா் ஹா்ஷ் மகாஜன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், தெலங்கானாவில் இருந்து மாநிலங்களவை தோ்ந் தெடுக்கப்படும் தோ்தலில் அபிஷேக் சிங்வி போட்டியிடுகிறார்.

தெலங்கானா பேரவையில் காங்கிரஸுக்கு பெரும்பான்மை இருப்பதால் இவரின் வெற்றி உறுதியாகியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *