ராகுல் காந்தியின் தண்டனை மனுவை ஏற்க மறுத்த நீதிபதி பாட்னாவுக்கு மாற்றம்

2 Min Read

தமிழ்நாட்டுக்கு மூன்று புதிய நீதிபதிகள்!

புதுடில்லி,ஆக.12- நாட்டின் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் பணியாற்றி வரும் 23 நீதிபதிகளை இடமாற்ற செய்ய உச்சநீதிமன்றத்தின் கொலீ ஜியம் பரிந்துரை செய்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதியும் இதில் அடங்கும்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் உச்ச நீதிமன்ற கொலீஜியம் அமைந்துள்ளது. இந்த கொலீஜியத்தில் நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், சஞ்சீவ் கன்னா, பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் கூட்டம் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, நாட் டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் பணியாற்றும் 23 நீதிபதிகளை இட மாற்றம் செய்ய கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

இதன்படி குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் எம். பிரச்சாக், பாட்னா உயர்நீதிமன்றத்துக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவ தூறு வழக்கில் 2 வருட சிறைத் தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி, குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தவர் நீதிபதி ஹேமந்த் எம். பிரச்சாக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவரை இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

மேலும், குஜராத் உயர்நீதி மன்றத்தில் பணியாற்றி வரும் நீதி பதிகள் அல்பேஷ் கே. கோக்ஜே, குமாரி கீதா கோபி, சமீர் ஜே. தாவே ஆகியோரும் முறையே அலகாபாத், சென்னை,

ராஜஸ்தான் உயர் நீதிமன்றங் களுக்கு இடமாற்றம் செய்யப்பட் டுள்ளனர்.

பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகள் அர்விந்த் சிங் சங்வான், அவ்னீஷ் ஜிங்கான், ராஜ்மோகன் சிங், அருண் மோங்கா ஆகியோர் முறையே அலகாபாத், குஜராத், மத்தியப் பிர தேசம், ராஜஸ்தான் உயர் நீதிமன்றங் களுக்கு இட மாற்றம் செய்யப்பட் டுள்ளனர்.

அலகாபாத்தில் பணியாற்றி வரும் நீதிபதி விவேக் குமார் சிங், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி கள் முன்னூரி லஷ்மண், எம்.சதீர் குமார், ஜி. அனுபமா சக்கரவர்த்தி ஆகியோர் முறையே ராஜஸ்தான், சென்னை, பாட்னா உயர் நீதிமன்றங் களுக்கு இட மாற்றம் செய்யப்பட் டுள்ளனர். 

இவ்வாறு கொலீஜியம் தனது பரிந்துரையில் தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *