அதானி மோசடியை மூடி மறைக்க ராகுல்காந்திக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை?

Viduthalai
1 Min Read

புதுடில்லி, ஆக. 12- அதானி மற்றும் செபி அமைப்பின் தலைவியின் ஊழல் விவகாரம் வெடித்த நிலையில் அதனை மறைக்க நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை மீண்டும் அழைப்பாணை அனுப்ப திட்டமிட்டுள்ளது
2022 ஆம் ஆண்டு நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியை 4 அமர்வுகளில் கிட்டத்தட்ட 40 மணிநேரம் அமலாக்கத்துறை விசாரித்தது. இந்தநிலையில், நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் ராகுல் காந்தியை அமலாக்கத்துறை மீண்டும் விசாரணைக்கு அழைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன..

இகுறித்து செய்தியாளர்கள் ழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய ராகுல், ஈடி அதிகாரிகளை எதிர் பார்த்து காத்திருப்பதாக கூறியவர், ஏற்கெனவே ,ஈடி அதிகாரியிடம் இந்தியாவில் ஜனநாயகத்தை யார் கொலை செய்கிறார்கள் என்று பார்க்க விரும்புவதாக தெரிவித்தேன் என்று கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியால் நடத்தப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்புடைய வழக்கில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை விசாரணைக்கு ஆஜராகும்படி அழைப்பாணை அனுப்ப அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை விரைவில் முடிக்கப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு ஏது வாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது எனவே வழக்கில் தொடர்புடைய அனைவரும் விரைவில் நேரில் அழைக்கப்படுவார்கள் என அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக கடந்த வாரம் தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், மக்களவையில் மோடியின் சக்கர வியூகத்தில் நாடு மாட்டிக்கொண்டுள்ளதாகத் தான் பேசியது சிலருக்குப் பிடிக்கவில்லை. எனவே அமலாக்கத்துறை விரைவில் தனது வீட்டுக்கு ரெய்டு வர உள்ளதாகவும், அவர்களுக்காக தேநீர் பிஸ்கட்டுடன் காத்திருப்பதாகவும் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், நேஷனல் ஹெரால்டு வழக்கில் மீண்டும் விசா ரணை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *