கோவையைச் சேர்ந்தவர் கோவையிலிருந்து – அபுதாபிக்கு முதல் விமானத்தை இயக்கினார்

Viduthalai
1 Min Read

கோவை, ஆக.11 பீளமேட்டில் அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டுகின்றன. தொழில் நகரமான கோவையை உலக நாடுகளுடன் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ஏற்ெகனவே விமானம் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புதிதாக அய்க்கிய அரபு நாடுகளில் ஒன்றான அபுதாபிக்கு கோவையில் இருந்து நேரடி விமான சேவை துவங்கப்பட்டுள்ளது. இதை இண்டிகோ விமான நிறுவனம் இயக்குகிறது. வாரத்திற்கு 3 நாட்கள் விமான சேவை வழங்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (10.8.2024)அபுதாபி சென்ற முதல் விமானத்தை இயக்கிய விமானி விவேக் கந்தசாமி பயணிகளை வரவேற்று உரையாற்றினார். விமானி விவேக் கந்தசாமி மற்றும் துணை விமானி வினோத் குமார் சந்திரன் ஆகியோர் கோவையைச் சேர்ந்தவர்கள் என்பதால் கூடுதல் மகிழ்ச்சி அளிப்பதாக அப்போது தெரிவித்ததோடு தமிழில் பேசியது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *