மக்களவையில் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி.,
புதுடில்லி, ஆக.11 அறிவியலை புறக்கணித்து விட்டு புராணங்களை நம்பக்கூடிய அரசாங்கமாக உள்ளது! ஒன்றிய அரசாங்கத்தின் இந்தப் புராண நம்பிக்கைக் கொள்கை மாற்றப்பட வேண்டும் என்று திண்டுக்கல் சிபிஎம் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் மக்களவையில் பேசுகையில் கூறினார்.
8.8.2024 அன்று சிவில் விமா னப் போக்குவரத்துத் துறை சார்பாக பாரதீய வாயுவின் வித் யோக் மசோதா குறித்தான விவா தத்தில் கலந்து கொண்டு ஆர்.சச்சி தானந்தம் பேசியதாவது:
“சிவில் விமானப் போக்கு வரத்துத்துறை சார்பாக முன்மொழியப் பட்டிருக்கக் கூடிய பாரதீய வாயு வின் வித்யோக் மசோதாவுக்கான திருத்தங்களையெல்லாம் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் முன்மொழிந்து பேசி னார். ஆனால், விமானத்துறை படுகிற பாட்டை பார்த்தால் அந்த விமானத்துறை கொள்கையில் மாற்றம் உருவாக வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.
ஒரு வழித்தடத்தை கூட உருவாக்காத சிவில் விமானத்துறை என்பது விமானங்களை பராமரிக்கிற, விமானங்களுக்கு பதிவுச் சான்று வழங்குகிற, விமானங்களுக்கு தகுதிச்சான்றிதழ் வழங்கக்கூடிய ஒரு துறையா கத்தான் இருக்கிறது. இங்குள்ள உறுப்பினர்கள் உட்பட, அமைச்சர்கள் உள்பட கோரிக்கை வைத்தால் கூட ஒரு விமான வழித்தடத்தையோ, புதிய விமான நேரத்தையோ ஒதுக்கீடு செய்யக்கூட முடியாத துறையாக உள்ளது. இதிலே மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
மத்தியப்பிரதேசம் ஜபல்பூரில் ரூ.430 கோடி மதிப்பீட்டில் கட்டப் பட்ட விமான நிலையம் பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது. அந்த விமான நிலையம் திறந்து வைத்த 4 மாதங்களுக்குள் இந்த நாடாளுமன்றத்தைப் போலவே மழை பெய்தால் ஒழுகுகிறது. மேற்கூரை இடிந்து விழுகிறது. அதே போல் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டிலே ரூ.1400 கோடி மதிப்பீட்டிலே கட்டப்பட்டுள்ள விமான நிலையம் கடந்த ஏப்ரல் 27 அன்று திறந்து வைக்கப்படு கிறது. 28 அன்று இடிந்து விழுகிறது. இதுதான் இந்த துறையின் பணியாக இருந்து கொண்டிருக்கிறது. புதுடில்லியில் கட்டப்பட்ட டெர்மினல் ஒன் விமான நிலையம் இடிந்து விழுந்தது. இது புதிதாக பொறுப்பேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
25 விமான நிலையங்கள் தனியார் வசம்
2023இல் சென்னைக்கு வந்த அன்றைய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இந்த ஆண்டில் 200 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் கடந்த 65 ஆண்டுகளில் 74 விமான நிலையங்கள் தான் உருவாக்கப்பட்டன. நாங்கள் 200 விமான நிலையங்கள் உருவாக்க உள்ளோம் என சொன்னார். ஆனால் அதற்கு பதிலாக இன்றை க்கு என்ன நடைபெறுகிறது என்று சொன்னால், ஏற்கெனவே உள்ள 25 விமான நிலையங்களை தனியா ருக்கு கொடுக்கிற வேலை தான் நடக்கிறது. குறிப்பாக திருவனந்த புரம், ஜெய்ப்பூர், மங்களூரு ஆகிய விமானங்கள் 50 ஆண்டுகளுக்கு அதானி எண்டர்பிரைசஸ் நிறு வனத்திற்கு குத்தகைக்கு விடக் கூடிய நிலையைத்தான் பார்க்கிறோம்.
விமான நிலையங்களுக்கான இடத்தைக் கொடுக்க மாநில அரசுகள் தயாராக உள்ளன. மாநில அரசுகள் நிலத்திற்கு ஒரு ரூபாயை பெற்றுக் கொண்டு சிவில் விமான போக்குவரத்துத் துறைக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுக்கப்படுகிறது. ஆனால் அந்த இடத்தை நேரடியாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தனியாருக்கு 50 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுக்கிறது. இதில் மாநில அரசுக்கு எந்த வருவாயும் கிடை யாது. ஆகவே நிலத்தைக் கொடுக் கும் மாநில அரசுகளுக்கும் உரிய பங்கை வருமானத்தில் ஒரு பங்கை கொடுக்க வேண்டும்.
53 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஏர் இந்தியா விமானம் 18 ஆயிரம் கோடிக்கு டாட்டா நிறுவனத்திற்கும் சொற்ப விலைக்கு வழங்கப்பட்டி ருக்கிறது. விமானத்தை டாட்டா வுக்கும், விமான நிலையத்தை அதானிக்கும் கொடுப்பது தான் இந்த துறையின் கொள்கையாக உள்ளது. இந்த கொள்கை மாற்றப் பட வேண்டும். சிம்லா உட்பட 25 விமான நிலையங்களில் இரவில் விமானம் இறங்கும் வசதி இல்லை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த விமான நிலையங்கள் மேம்படுத்தப்பட வேண்டும்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் விமானத்தில் பயணிப்பதை சாதா ரண மக்கள் பெரிதாக பார்க்கிறார் கள். தங்களுக்கும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்குகிறார்கள். ஏழை மக்கள் பயணம் செய்யக்கூடிய விமான சேவைகளை நடத்த வேண்டும் என்று சொன்னால் அரசே நேரடி யாக விமானத்தை இயக்குகிற கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். பிரதான நகரங்க ளில் உள்ள மெட்ரோ சேவைகளை மேம்படுத்த வேண்டும். மதுரை -டில்லிக்கு கூடுதலான விமான சேவைகளை உருவாக்க வேண்டும். கொடைக்கானல் எங்கள் தொகுதியில் உள்ள மிகப்பெரிய சுற்றுலா தலம். அந்த கொடைக்கானலுக்கு வர வேண்டும் என்று சொன்னால் மது ரையிலோ கோவையிலோ உள்ள விமான நிலையத்தில் இறங்கித் தான் செல்ல வேண்டும். ஆகவே திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும்.
ஆந்திரப்பிரதேச மாநில பல் கலைக்கழகத்தைச் சேர்ந்த துணை வேந்தர், ராவணன் காலத்திலேயே புஷ்பக விமானங்கள் பயன் படுத்தப்பட்டதாக பேசியது பத்திரி கையில் செய்தியாக வந்துள்ளது. 1910ஆம் ஆண்டு தான் விமான சேவை தொடங்கப்பட்டது. ஆனால், ராவணன் காலத்தில் புஷ்பக விமான சேவை தொடங்கப்பட்டது என்று ஒரு பல்கலைக் கழகத் துணை வேந்தரே சொன்னால், இந்த அரசாங்கம் அறிவியலை புறக் கணித்து விட்டு புராணங்களை நம்பக்கூடிய அரசாங்கமாக உள்ளது. எனவே அரசாங்கத்தின் இந்த புராண நம்பிக்கைக் கொள்கை மாற்றப்பட வேண்டும்” என்று ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., மக்களவையில் பேசினார்.