புதுடில்லி, ஆக.7- ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீட்டுதொகைமீதான ஜி.எஸ்.டி.யை திரும்பப்பெ றக்கோரி நாடாளுமன்ற வாயிலில் இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மருத்துவக் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடுகளுக்கான பிரீமியம் மீது 18 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டுள் ளது. இதை திரும்பப்பெறு மாறு ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரியும், திரிணாமுல் காங் கிரஸ் கட்சி உறுப்பினர்களும், ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதி இருந்தனர்.
இந்தநிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி இந்தியா கூட்டணி கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற வாயில் முன்பு நேற்று (6.8.2024)ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராகுல் காந்தி
இதில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங் கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத்பவார், தி.மு.க.சார்பில் டி.ஆர்.பாலு மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட அனைவரும் “வரி பயங்கர வாதம்” என்றவாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் தொகை மீதான ஜி.எஸ்.டி.யை திரும்பப்பெற வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர்.
இது தொடர்பாக எதிர்க் கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில், ஒவ்வொரு ஆண்டும் மருத்துவக் காப்பீட்டு தொகையை செலுத்தும் லட்சக்கணக்கான சாமானியர்களிடம் இருந்து மோடி அரசாங்கம் ரூ.24,000 கோடி வசூலித்தது. ஒவ் வொருபேரிடரிலும் ஒரு வரி வாய்ப்பை’ தேடுவது பா ஜனதா அரசின் உணர்வற்ற சிந்தனைக்கு சான்றாகும். இந்தியா கூட்டணி இந்த சந்தர்ப்பவாத சிந்தனையை எதிர்க்கிறது. மருத்துவக் காப் பீடு மற்றும் ஆயுள் காப்பீடு ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில், மருத்து மற் றும் ஆயுள் காப்பீட்டு பிரீமியங்கள் மீதான 18 சதவீத ஜி.எஸ்.டி.யை உடனடியாக நீக்க வேண்டும். ஏனெனில் இதுபோன்று பணம் பறிப்பது நடுத்தர மக்களை பாதிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.