வாக்குப் பதிவு விகிதத்தில் குளறுபடி செய்து 79 தொகுதிகளில் பாஜக வெற்றி காங்கிரஸ் குற்றச்சாட்டு

viduthalai
1 Min Read

புதுடில்லி, ஆக.4 மக்களவைத் தேர்தலில் இறுதி வாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடி செய்து பாஜக 79 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்தத் தலைவரும், மேனாள் எம்.பி.யுமான சந்தீப் தீக்ஷித், “வோட் ஃபார் டெமாக்ரசி’ என்ற அமைப்பு பாஜக வெற்றி பெற்ற 79 தொகுதிகளை குறிப்பாக அடையாளம் கண்டுள்ளது.
ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 12.5 சதவீதம் வரை வித்தியாசம் உள்ளது. லட்சத்தீவு உள்ளிட்ட சில இடங்களில் 25 சதவீதம் வரையிலும் பெரிய வித்தியாசம் இருப்பது தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது.

மக்களவைத் தேர்தலில் முதல் கட்டத்தின் இறுதி புள்ளிவிவரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் 11 நாட்கள் எடுத்துக் கொண்டது. இரண்டாவது கட்டத்திற்கு 6 நாட்கள் மற்றும் அடுத்தடுத்த கட்டங்களுக்கு 4 முதல் 5 நாட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது. இது தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் இறுதி வாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடி செய்து பாஜக 79 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

கடந்த 2019-ஆம் ஆண்டில், வாக்குப்பதிவின் ஆரம்ப மற்றும் இறுதி புள்ளிவிபரங்களில் 1 சதவீத வித்தியாசம் மட்டுமே இருந்தது. இது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *