நாவலை கிராமம் பெரியார் இயக்கம் சார்பில் கல்வி விழிப்புணர்வு விழா

1 Min Read

தருமபுரி, ஆக. 4- அரூர் கழக மாவட்டம் நாவலை கிராமம் பெரியார் இயக்கம் சார்பில் கல்வி விழிப்புணர்வு விழா மக்கள் மத்தியில் சிறப்பாக நடைபெற்றது.

நாவலை ஊராட்சி மன்ற தொடக்கப்பள்ளி வளாகத்தில் கல்வி விழிப்புணர்வு விழா நடைபெற்றது. 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு முதல் மூன்று வரிசை மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கும், போட்டித் தேர்வில் வெற்றிப் பெற்றவர்களைப் பாராட்டிப் புத்தகங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
வடசென்னை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பரி சளித்து “பெரியார் அம் பேத்கர் பார்வையில் இன்றைய கல்வியின் தேவை” என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.

கழக வழக்குரைஞர் துரை அருண் தலைமையில் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்தனர்.

மாநிலத் துணை செயலாளர் மா.செல்லதுரை, அரூர் மாவட்ட இளைஞரணி தலைவர் த.மு.யாழ் திலீபன், இளைஞரணி செயலாளர் வினோத், சென்னை சஞ்சய், தருமபுரி நகர இளைஞரணி செயலாளர் அர்ஜுனன், திராவிட மாணவர் கழக வேப் பிலைப்பட்டி தோழர்கள் ப.பெரியார், கு.அரிஅரன், சு. சூர்யா, வெதரம்பட்டி போஸ், அரிஅரன், அஜித் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *