ஜெனிவா, ஆக.14- இந்திய நிறுவ னத்தால் தயாரித்து ஈராக்கிற்கு அனுப்பப்பட்ட இருமல் மருந்தான “கோல்ட் அவுட் (Cold Out)” தரமற் றது என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
“கோல்ட் அவுட் (Cold Out)” பாராசிட்டமால் குளோர்பெனி ரமைன் மாலேட் என்ற பெயரிலான இந்தியாவில் தயாராகும் இருமல் சிரப் (டானிக்) மத்திய கிழக்கு நாடான ஈராக்கிற்கு அனுப்பப்பட்டு வருகிறது. ஜலதோஷம் மற்றும் ஒவ் வாமைக்கு இந்த “கோல்ட் அவுட்” சிரப் பரிந்துரைக்கப்படுகின்றது. பிரபல ஆய்வகமான வலிசுர் எல்எல்சி (Valisure LLC) ஆய்வகம் “கோல்ட் அவுட்” இருமல் மருந்தை ஆய்வு செய்து வெளியிட்ட ஆய்வ றிக்கையில்,”கோல்ட் அவுட்டில் ஏற் றுக்கொள்ள முடியாத அளவுக்கு டைதிலீன் கிளைகோல் (0.25%), எத்திலீன் கிளைகோல் (2.1%) உள் ளது” என தகவல் வெளியாகியது
இதையடுத்து, உலக சுகாதார நிறுவனமும் ஆய்வு செய்து “கோல்ட் அவுட்” இருமல் மருந்து தரமற்றது என அறிக்கை வெளியிட்டது. டைதிலீன் கிளைகோல், எத்திலீன் கிளைகோல் ஆகியவை மனித உடலுக்குத் தீங்கு விளை விக்கக் கூடியவை. சில நேரங்களில் உயிரைக் கொல்லும் அளவிற்கு ஆபத்தானவை என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், ஈராக் மட்டுமின்றி இந்தியா உள்ளிட்ட நாடுகளில் “கோல்ட் அவுட்” இருமல் சிரப் மக்கள் பயன்பாட்டி ற்கு தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. “கோல்ட் அவுட்” இருமல் சிரப் மகாராட்டிரா மற்றும் சென் னையில் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
5ஆவது முறையாக எச்சரிக்கை பெறும் இந்திய மருந்துகள்
உலக சுகாதார நிறுவனம் கடந்த ஓராண்டில் மட்டும் தரமற்ற மருந்துகள் தொடர்பாக ஆறு முறை எச்சரிக்கை விடுத்தது.
இந்த ஆறு எச்சரிக்கையில், இந்திய மருந்து நிறுவனங்கள் அய்ந்தாவது முறையாக எச்சரிக்கையை பெற் றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. “கோல்ட் அவுட்” சிரப் தொடர்பாக ஈராக் அரசு நடத்திய சோதனைகளில் மருந்தின் தரம் தோல்வியடைந்த நிலையில், சந் தையில் புழக்கத்தில் உள்ளவை பறிமுதல் செய்யப்படுவதாக அந் நாட்டு சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.