புதுடில்லி, ஆக.3- இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ் நாடு மீனவர்கள் 87 பேர் தற்போது அந்த நாட்டு சிறையில் இருப்பதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது.
முதலமைச்சர் கடிதம்
இலங்கை கடற்படை யினரிடம் இருந்து தமிழ்நாடு மீனவர்களை பாதுகாக்குமாறு ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார்.
அந்தவகையில் இலங்கை சிறையில் உள்ள 80 மீனவர்கள் மற்றும் 173 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி ஒன்றிய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
அந்த கடிதத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாநிலங்களவையில் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்த கேள்விக்கு வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்திவர்தன் சிங் நேற்று (1.8.2024) எழுத்துமூலம் பதிலளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-
தூதரகம் மூலம் நடவடிக்கை
நமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி, பன்னாட்டு கடல் எல்லையை தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்ததாகக் கூறி இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது 83 இந்திய (தமிழ்நாடு) மீனவர்கள் இலங்கையில் நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளனர். 4 மீனவர்கள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதைத்தவிர தமிழர்களின் 169 மீன்பிடி படகுகளும் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்து வைக் கப்பட்டுள்ளன.
இந்த தகவல் கிடைத் தவுடனே நமது தூதரகம் மூலம் இலங்கை அரசிடம் இந்த பிரச்சினை எடுத்து செல்லப்பட்டு உள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட மீனவர் களை நமது தூதரக அதிகாரிகள் அடிக்கடி சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறார்கள்.
மீனவர்களை விரை வில் சிறையில் இருந்து விடுவித்து, தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை அதி காரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். இதற் காக இருநாட்டு மீனவர் களிடையேயான கூட்டு நடவடிக்கைக் குழுவும் அடிக்கடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
வாழ்வாதார பிரச்சினைக்கு முன்னுரிமை
இந்த நடவடிக்கைக்குழு கடைசியாக கடந்த 2022ஆம் ஆண்டு சந்தித்து இருக்கிறது. அப்போது இந்த விவகாரம் குறித்து அனைத்து அம் சங்களும் விரிவாக விவா திக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் அரசியல் பிரதிநிதிகள் அல்லது மாநில அரசு களிடம் இருந்து கடிதம் கிடைத்தவுடேன தற்போதைய நிலவரம் மற்றும் தூதரகங்கள் மூலம் எடுக்கப்பட்ட நட வடிக்கைகளை ஒன்றிய அரசு அவர்களுக்கு தெரி வித்து விடும்.
இந்தப் பிரச்சினையின் தொடக்கம் 1974ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் இடையே ஏற்பட்ட புரிந் துணர்வு வரை செல்கிறது. மனிதாபிமானம் மற் றும் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து தற்போதைய ஒன்றிய அரசு செயல்படுகிறது.
இவ்வாறு ஒன்றிய அமைச்சர் கீர்த்திவர்தன் சிங் தெரிவித்தார்.