‘மகளிர் உரிமைத்தொகை’ : ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்பு

Viduthalai
1 Min Read

தமிழ்நாடு

சென்னை, ஆக.15- மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெறும் மகளிருக்கும் வழங்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பை அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்றுள்ளது.

இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண் டினா, மாநிலப் பொது செயலாளர் அ.ராதிகா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு விதி முறைகள் அறிவிக்கப்பட்ட உட னேயே, அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் முதியோர் ஓய்வூதியம் மற்றும் இதர நலவாரிய அமைப்புகளில் உதவித் தொகை பெறக்கூடிய பெண்களையும் இத்திட்டத்தில் பயனாளிகளாக இணைக்க வேண் டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், மாற்றுத் திற னாளிகள் துறை சார்பில் வழங்கப் படும் பராமரிப்பு உதவித்தொகை பெறும் குடும்ப தலைவிகள், சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பத் தலைவிகள், இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டம், ஆதரவற்ற விதவை ஓய்வூதியத் திட்டம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஓய் வூதியத் திட்டம், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் ஓய்வூதியத் திட்டம், உழவர் பாதுகாப்பு துறை ஓய்வூதியத் திட்டம் போன்ற திட்டங்களில் ஓய்வூதியம் பெறக் கூடிய பயனாளி களும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம்.

இதனால் ஏராளமான பெண் கள் தமிழ்நாட்டில் பயன்பெறக் கூடிய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு மக்களின், பெண்களின் உணர்வு களை மதித்து தமிழ்நாடு அரசு எடுத்துள்ள இந்த நிலைபாடு மிகச் சரியானது என ஜனநாயக மாதர் சங்கம் பாராட்டுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *