அரசுப் பேருந்துகளில் 1.85 கோடி பேர் பயணம்

Viduthalai
1 Min Read

தமிழ்நாடு

சென்னை,நவ.18- அரசுப் பேருந்துகளில் அக்டோபர் மாதத்தில் மட்டும் 1.85 கோடி பேர் பயணம் செய்துள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் தொலை தூரப்பயணங்களுக்காக பலர் அரசுப் பேருந்துகளை பயன்படுத்தி வந்தாலும், தனியார் பேருந்துகளுடன் போட்டிபோடும் அளவுக்கு அரசுப் பேருந்துகளின் கட்டமைப்பு மற்றும் பயண நேரம் இல்லா ததால் பெரும்பாலானவர்கள் தனியார் பேருந்துகளில் பயணித்து வருகின்றனர். இந்நிலையில், அரசுப் பேருந்துக ளின் கட்டமைப்புகள், பயண நேரம் உள்ளிட்டவற்றில் போக்குவரத்துக்கழகம் அதிக கவனம் செலுத்தி வருவ தால் சமீபகாலமாக அரசுப் பேருந்துகளில் பயணம் செய் பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதிலும் விழாக் காலங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இது தவிர சிறப்பு பேருந்துகளுடன் முன்பதிவில்லா பேருந்துகளின் எண்ணிக்கையும் அதி கரித்திருப்பதால் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

இதன்படி, நிகழாண்டு அக்டோபர் மாதத்தில் சுமார் 1.85 கோடி பயணிகள் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்திருப்பதாக அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. 2022 அக்டோபரில் 1.67 கோடி பேர் அரசுப் பேருந்துகளில் பயணித்திருந்த நிலையில், நிகழாண்டு 18 லட்சம் பேர் அதிகமாக பயணித்துள்ளனர். விரைவில் 1,666 புதிய பேருந்துகள் அறிமுகம் செய்யப் படவுள்ளதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *