இந்தியா வெற்றி பெறப் பெண்களுக்குச் சம இடம் அளியுங்கள்: ராகுல் காந்தி

Viduthalai
1 Min Read

அரசியல்

புதுடில்லி, ஆக.16 மறைந்த பிரதமர் இந்திரா காந்தி பெயரில் இந்திரா பெல்லோஷிப் என்ற உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகை இளைஞர் காங்கிரஸ் சார்பில் அளிக்கப்படுகிறது.

இதற்கு விண்ணப்பிக்குமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பெண்களுக்கு அழைப்பு விடுத்துள் ளார். மேலும் இணைய வழியில் இதற்கான விண்ணப்பம் செய்வ தற்கான இணைப்பை அவர் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து ராகுல்காந்தி,

“பெண்கள் நமது சமுதாயத்தில் சம  இடம் பெறும்போதுதான் இந்தியா உண்மையிலேயே வெற்றி பெறும்.

இந்த இந்திரா பெல்லோஷிப், பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வும், அரசியலை மாற்றி அமைக்கவும் பயன்படுகிறது. இந்திய அரசியலில் பெண்கள் தங்களுக்கான சரியான இடத்தை எடுத்துக் கொண்டு இந்தி யாவின் தலைவிதியை வடிவமைக்க வேண்டும். பெண்களுக்குச் சம உரிமை உள்ளது. என்று கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *