கு.ஆ.சித்தார்த்-வி.பா.திவ்யபாரதி ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு வரவேற்பு விழா

2 Min Read

உடுமலைப்பேட்டை, ஜூலை29- பெரம்பலூர் அக்ரி.ந.ஆறுமுகம்-மருத்துவர் குணகோமதி ஆகியோரின் மகன் கு.ஆ.சித்தார்த் – திருப்பூர் இல.பாலகிருஷ்ணன்-விஜயகுமாரி ஆகியோரின் மகள் வி.பா.திவ்யபாரதி ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு வரவேற்பு விழா திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் 28-07-2024 அன்று உடுமலைப்பேட்டையில் நடைபெற்றது.

வரவேற்பு விழாவிற்கு வருகைதந்த கழகத் துணைத் தலைவர் அவர்களுக்கு உடுமலை ரயில் நிலையத்தில் தாராபுரம் மாவட்டத் தலைவர் கணியூர் க.கிருஷ் ணன் தலைமையில் வரவேற்பு அளித் தனர். மணவிழா வரவேற்பு நிகழ்ச்சி காலை 11 மணியளவில் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை இல.அருட்செல்வன் வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து மணமக்களை யும், மணமக்களின் பெற்றோர்களையும் பொறுப்பாளர்கள் பாராட்டி உரை யாற்றினார்கள்.

திராவிடர் கழகம்

மணமக்களை வாழ்த்தி பொள் ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி,பொள்ளாச்சி மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம், உடுமலை தி.மு.க. நகர மன்ற தலைவர் மு.மத்தீன், மடத்துக்குளம் மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் இரா.ஜெயராம கிருஷ்ணன், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், தாராபுரம் மாவட்டத் தலைவர் கணியூர் க.கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் தம்பி.பிரபாகரன், அவிநாசி ஆசிரியர் அ.இராமசாமி, திருப்பூர் மாவட்டத் தலைவர் யாழ்.ஆறுச்சாமி, மேட்டுப்பாளையம் மாவட்டத் தலைவர் சு.வேலுச்சாமி, கோவை மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகரன், முனைவர் விஜயலட்சுமி, முனைவர் மூர்த்தீஸ்வரி, தஞ்சை மாநகர செயலாளர் வன்னிப்பட்டு செ.தமிழ்ச்செல்வன், திருப்பூர் இரா.ஆறுமுகம், பெரம்பலூர் விசிக ஸ்டாலின் ஆகியோர் மணமக்களை வாழ்த்து உரையாற்றினார்கள். நிகழ்வில் திராவிட மாணவர் மாநிலச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், பொள்ளாச்சி மாவட்ட காப்பாளர் பொறியாளர் தி.பரமசிவம், பழ.அன்பரசு, ப.குமரவேல், வழக்குரைஞர் நா.சக்திவேல், மா.தங்க வேல், மா.சிவக்குமார், கோரிகடவு ச.திராவிடச் செல்வன், அ.ரவிச்சந்திரன், சி.மாரிமுத்து, ஆசிரியர் முத்து.முருகேசன், கரு.மைனர், மு.கிருஷ்ணவேணி, நா.மாயவன், நா.சாமிநாதன், இரா.சின்னப்பதாசு, வெ.கலையரசன், பா.மா.கருணாகரன், அ.ப.நடராசன், ச.பெரியார் பித்தன், ம.முத்தரசன், மா.தங்கவேல், சி.கந்தவடிவேல், தி.திருமுருகன், ந.ஜெயப்பிரகாஷ், ஆ.முனீஸ்வரன், நாத்திக.சிதம்பரம், ச.முருகன், ஊத்துக்குளி வீரமுத்து, கி.இளந்தென்றல், மா.தமிழ்நிலவன், நா.செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் கி.மயில்சாமி, வெ.குமாரராசா, நன்றியுரை கு.மணிவண்ணன். உடுமலை வரலாற்று ஆய்வு மய்யத்தோழர்கள் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் கலந்துக் கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *