தயவு காமாட்சி அய்யா வேலூர்
சனாதனத்தின் உச்சமே வள்ளலாரின் சமரச சன்மார்க்கம் என்று தமிழ்நாடு ஆளுநர் அண்மை யில் தமது ஆய்வுக் கண்டு பிடிப்பை வெளியிட்டிருந்தார். அக்கருத்துக்கு அரண் சேர்க்கும் வகையில் 27-7-2023 அன்று ‘தினமணி’யில் ‘ஒருசொல் இருபொருள்’ என்ற தலைப்பில்
பெ. சிதம்பரநாதன் அவர்கள் எழுதிய கட்டுரை வெளியானது. மதம் என்ற சொல் ஆணவம் என்ற பொருளைக் குறிப்பது; அந்த ஆணவப் பேய் பிடியாதிருக்க வேண்டும் என்று வள்ளலார் கூறினாரேயன்றி சனாதனமாகிய இந்து மதத்தை அவர் குறிப்பிடவில்லை. என்று கட்டுரையாளர் வாதித்திருந்தார்.
“எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”
என்ற வள்ளுவனார் வாக்கின்படி. மெய்ப்பொரு ளைத் தேடுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
சைவசித்தாந்தம் குறிப்பிடும் மும்மலங்களா கிய ஆணவம், கன்மம், மாயையும் மதம் மாச்சரி யம் உலோபம் குரோதம் வேதங்களில் சொல்லப் படும் ஜாதி சமயச் சடங்குகளும் நம்மை மிரட்டும் பேய்களே என்று வள்ளலார் சங்கத்தை நிறு வினாரே அன்றி மதத்தை நிறுவவில்லை.
“அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்திருந்த
உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்
தடைவித்திட அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்
கென்றே எனை இந்த
உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன்
அருளைப் பெற்றேனே”.
என்று வள்ளலார் தமது பிறப்பின் நோக்கத் தைக் கூறி உள்ளார். இந்தப்பாடலே அதற்குச் சான்று. வள்ளலார் பாடியருளிய நடராஜபதி மாலையில் வெளிப்படையாகவே சமய மதத்தைப் பேய் என்றும், பிச்சுப்பிள்ளை விளையாட்டென வும் சாடியுள்ளதை இதோ காணுங்கள்.
“பேருற்ற உலகிலுறு சமய மத நெறினலாம்
பேய் பிடிப் புற்ற பிச்சுப்
பிள்ளை விளையாட்டென உணர்ந்திடா துயிர்கள் பல
பேதமுற்று அங்கும் இங்கும்
போருற்று இறந்து வீண்போயினார் இன்னும் வீண்
போகாதபடி விரைந்தே
புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப்
பொருளினை உணர்த்தி எல்லாம்…..”
தாம் கண்டுணர்ந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவனின் கட்டளையின் படி வள்ளலார் 1867இல் வடலூரில் சத்திய தருமச் சாலையும் 1871இல் சத்திய ஞான சபையையும் நிறுவினார். சத்திய தருமசாலையில் அணையாத அடுப்பேற்றி வைத்து நாள் தவறாமல் மூன்று வேளையும் ஜாதி, சமய, மத வேற்றுமை பாராமல் பசித்து வரு வோர்க்கு உணவளிக்க ஏற்பாடு செய்துள்ளார். சத்திய ஞான சபையில் சமய மத வேதாகமச் சடங்குகள் ஏதுமின்றி உருவ வழிபாடும் இன்றி அருட் ஜோதி வழிபாடே நாள்தோறும் நடைபெற ஏற்பாடு செய்துள்ளார்.
வள்ளற் பெருமான் சென்னையில் வாழ்ந் திருந்த காலத்தில் சிற்றறிவு உடையவராய் இருந்த தாகவும் சைவ சமயத்தில் மிகுந்த பற்றுடையவராக இருந்ததாகவும் “அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது. மேலும் பேருபதேசத்தில் சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும் வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம் என்றும் சொல்கிறார். வடலூருக்கு வந்தபின் உண் மையை உணர்ந்து உருவ வழிபாட்டை தவிர்த்து அருட்பெருஞ்ஜோதி வழிபாட்டிற்குச் சத்திய ஞானசபையை நிறுவினார்கள். ஏழைகளின் பசிப்பிணியை நீக்கிட தருமசாலையும் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நற்கருங்குழி கிராமத்திலும் 1965இல் வள்ளலார் நிறுவினார்கள் என்பதே வரலாற்று உண்மை.
வள்ளலார் இறுதியான, உறுதியான கொள் கையை ஆறாம் திருமுறைப் பாடல்களிலும் உரை நடைப் பகுதியிலும் நான்கு விண்ணப்பங்களிலும், பேருபதேசம் என்கின்ற பெரிய சொற் பொழி விலும் காணலாம். அவைகளையே அவரது விருப்ப ஆவணமாக கொள்ளப்பட வேண்டும்.
வள்ளலார் ஆண்டவரிடம் செய்துகொண்ட விண்ணப்பம்
“திருச்சிற்றம்பலம்
எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே!
இது தொடங்கி எக்காலத்தும் சுத்தசன்மார்க் கத்தின் முக்கிய தடைகளாகிய சமயங்கள், மதங் கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனதில் பற்றாத வண்ணம் அருள்செய்தல் வேண்டும். சுத்தசன்மார்க்கத்தின் முக்கிய லட்சிய மாகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை எங் களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்து எவ்விதத்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்க செய் வித்தருளல் வேண்டும்.
எல்லாமாகிய தனிப் பெருந்தலைமை அருட் பெருஞ்ஜோதி ஆண்டவரே! தேவர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம்! வந்தனம்!”
சிதம்பரம் இராமலிங்கம்
ஆறாம் திருமுறையையும், குறிப்பாக உரை நடைப் பகுதியையும் படித்து உண்மையை உணர்ந்து தெளிந்தால் சனாதனமும் சுத்த சன்மார்க் கமும் உண்மையை உணர்ந்த பின்னும் திரித்துப் பேசும் பிடிவாதமே ஆணவமாகிய “மதம்”,
சுனாதனம் வேறு சுத்த சன்மார்க்கம் வேறு சனாதனத்திற்கும் சுத்த சன் மார்க்கத்திற்கும் சம்பந்தமே இல்லை – சனாதத்தை ஒழிக்க வந்தது வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம்
முழுப் பூசணிக்காயை ஒருபிடி சோற்றில் மறைத்திட இயலாது.