கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 27.7.2024

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* தொழில் முதலீடுகளை ஈர்க்க 15 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 22இல் அமெரிக்கா பயணம்: ஒன்றிய அரசு அனுமதி – கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையை சந்திக்கிறார்

* பள்ளிகள் ஜாதிப் பெயருடன் இருப்பது சரியா? தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி.

*சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பது குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கும், ஆளுநரின் செயலாளருக்கும் உச்சநீதிமன்றம் தாக்கீது.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு இல்லை; ஆளுநர்கள் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர்கள் போன்ற பிரச்சினைகளை எழுப்பியதால் நாடாளுமன்றம் அமளி.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* நிட்டி ஆயோக்கை கைவிடுங்கள், திட்டக்குழுவை மீண்டும் கொண்டு வாருங்கள்: மம்தா பேட்டி.

* அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் ஒருவரே 32 ஆசிரியர் பணியிடங்களில் பணியாற்றும் அதிசயம்; 2,500 காலியிடங்களில் 211 பேரை மட்டுமே வைத்து நிரப்பப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. அறப்போர் இயக்கம் வெளியிட்டதைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகம் குழு அமைத்து விசாரணை.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* நீட்-யுஜி தாள் கசிவு வழக்கில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியில், ஜார்க்கண்ட் மாநிலம் – தன்பாத்தில் உள்ள மாவட்ட தலைமையகத்தில் இருந்து சுமார் 20 கிமீ தொலைவில் உள்ள சுகம்திஹ் என்ற இடத்தில் உள்ள குளத்தில் இருந்து சிபிஅய் குழு அலைபேசிகள் நிறைந்த ஒரு சாக்குப்பையை மீட்டுள்ளது.

* ‘பாரதத்தை’ ‘ஹிந்துஸ்தானாக’ மாற்ற ஒவ்வொரு இந்துப் பெண்ணும் நான்கு மகன்களைப் பெற்றெடுக்க வேண்டும் என்று பஞ்சாயத்து நிரஞ்சனி அகாராவின் மகாமண்டலேஸ்வரர் சுவாமி பிரேமானந்த் மகாராஜ் என்ற ஹிந்து சமயப் பார்ப்பனர் அழைப்பு விடுத்துள்ளார்.

தி டெலிகிராப்:

* பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை குறித்த அதன் நிலைப்பாடு தொடர்பான கேள்விக்கு நேரடியான பதிலை ஒன்றிய விவசாய அமைச்சர் அளிக்காமல் மழுப்பல்.

*உ.பி.யின் கன்வார் யாத்திரையின்போது வணிகர்கள் கடைக்கு பெயர் வைக்க வேண்டும் என்பதற்கான தடையை மேலும் நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு – சாமியார் யோகி அரசின் வாதம் நிராகரிப்பு.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *