டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தொழில் முதலீடுகளை ஈர்க்க 15 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 22இல் அமெரிக்கா பயணம்: ஒன்றிய அரசு அனுமதி – கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையை சந்திக்கிறார்
* பள்ளிகள் ஜாதிப் பெயருடன் இருப்பது சரியா? தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி.
*சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பது குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கும், ஆளுநரின் செயலாளருக்கும் உச்சநீதிமன்றம் தாக்கீது.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு இல்லை; ஆளுநர்கள் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர்கள் போன்ற பிரச்சினைகளை எழுப்பியதால் நாடாளுமன்றம் அமளி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* நிட்டி ஆயோக்கை கைவிடுங்கள், திட்டக்குழுவை மீண்டும் கொண்டு வாருங்கள்: மம்தா பேட்டி.
* அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் ஒருவரே 32 ஆசிரியர் பணியிடங்களில் பணியாற்றும் அதிசயம்; 2,500 காலியிடங்களில் 211 பேரை மட்டுமே வைத்து நிரப்பப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. அறப்போர் இயக்கம் வெளியிட்டதைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகம் குழு அமைத்து விசாரணை.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* நீட்-யுஜி தாள் கசிவு வழக்கில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியில், ஜார்க்கண்ட் மாநிலம் – தன்பாத்தில் உள்ள மாவட்ட தலைமையகத்தில் இருந்து சுமார் 20 கிமீ தொலைவில் உள்ள சுகம்திஹ் என்ற இடத்தில் உள்ள குளத்தில் இருந்து சிபிஅய் குழு அலைபேசிகள் நிறைந்த ஒரு சாக்குப்பையை மீட்டுள்ளது.
* ‘பாரதத்தை’ ‘ஹிந்துஸ்தானாக’ மாற்ற ஒவ்வொரு இந்துப் பெண்ணும் நான்கு மகன்களைப் பெற்றெடுக்க வேண்டும் என்று பஞ்சாயத்து நிரஞ்சனி அகாராவின் மகாமண்டலேஸ்வரர் சுவாமி பிரேமானந்த் மகாராஜ் என்ற ஹிந்து சமயப் பார்ப்பனர் அழைப்பு விடுத்துள்ளார்.
தி டெலிகிராப்:
* பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை குறித்த அதன் நிலைப்பாடு தொடர்பான கேள்விக்கு நேரடியான பதிலை ஒன்றிய விவசாய அமைச்சர் அளிக்காமல் மழுப்பல்.
*உ.பி.யின் கன்வார் யாத்திரையின்போது வணிகர்கள் கடைக்கு பெயர் வைக்க வேண்டும் என்பதற்கான தடையை மேலும் நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு – சாமியார் யோகி அரசின் வாதம் நிராகரிப்பு.
– குடந்தை கருணா