திருவண்ணாமலை, ஜூலை 25- ‘நீட்’ எதிர்ப்பு பரப்புரை பயணக் குழுவினருக்கு திருவண்ணாமலையில் ம.தி.மு.க. சார்பில் அனைவரையும் வரவேற்று கொள்கை விளக்க செயலாளர் ஆ.வந்தியத்தேவன், துணைப் பொதுச்செயலாளர் செஞ்சி ஏ.கே.மணி, மாவட்டச் செயலாளர் சீனி கார்த்திகேயன், பாசரை பாபு, கிருஷ்ணமூர்த்தி மற்றும் ம.தி.மு.க தோழர்கள் கலந்துகொண்டு நீட் தேர்வை விளக்க பரப்புரையில் வந்த தோழர்களுக்கு சிறப்பு செய்தனர்.
போளூர் எல்லையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இரு சக்கர வாகன பயணத்தை வரவேற்று அழைத்து வந்து போளூர் பேருந்து நிலையம் எதிரில் அமைக்கப்பட்டு இருந்த இடத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் ஏன் என்பதைப் விளக்கி பிரச்சாரம் நடைபெற்றது இதில் அனைத்து கட்சி தலைவர்களும் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.
நீட் எதிர்ப்புப் பரப்புரைப் பயணக் குழுவினருக்கு திருவண்ணாமலை, போளூரில் வரவேற்பு

Leave a Comment