விருப்பு, வெறுப்புடன் அரசை நடத்துவதா? பிரதமர் மோடிக்கு எதிராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்

Viduthalai
1 Min Read

சென்னை, ஜூலை 25 அரசியல் விருப்பு, வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள் என்று பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மக்களவையில் 2024-2025-ஆம் நிதி ஆண்டுக்கான ஒன்றிய நிதி நிலை அறிக்கை கடந்த 23-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 27-ஆம் தேதி நடைபெறும் நிட்டி ஆயோக் கூட் டத்தில் பங்கேற்கப்போவது இல்லை என்று அறிவித்தார்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (24.7.2024) வெளியிட்ட எக்ஸ் வலை தள பதிவில் கூறியுள்ளதாவது: ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் ஒருசில மாநிலங்கள் நீங்கலாக, பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இதை கண்டித்து இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களே. ‘‘தேர்தல் முடிந்துவிட்டது, இனி நாட்டை பற்றியே சிந்திக்க வேண்டும்’’ என்று கூறினீர்கள். ஆனால், உங்கள் நிதிநிலை அறிக்கை உங்கள் ஆட்சியை காப்பாற்றுமே தவிர, இந்தியாவை காப்பாற்றாது. அரசை பொதுவாக நடத்துங்கள். இன்னமும், தோற்கடித்தவர்களை பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம். அரசியல் விருப்பு, வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள் என அறிவுறுத்த கடமைப்பட்டுள்ளேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *