கேதார்நாத் மலைப்பாதையில் நிலச்சரிவு: பக்தர்கள் மூவர் பலி!

viduthalai
1 Min Read

டேராடூன், ஜூலை 23– உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாத் மாவட்டத்தில் உள்ள சித்வாசா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் இறந்து போயினர் மற்றும் 8 பேர் காயமடைந்தனர்.

கவுரிகுண்ட் அருகே கேதார்நாத் யாத்திரை பாதையில் பக்தர்கள் சென்றுக் கொண்டிருந்தபோது இந்த நிகழ்வு நடந்துள்ளது.

கேதார்நாத் யாத்திரை பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக சிலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக ருத்ரபிரயாக்கில் உள்ள மாவட்டக் கட்டுப்பாட்டு அறையின் மூலம் மாநில பேரிடர் மீட்புக் குழுவுக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தகவல் கிடைத்ததும் உடனடியாக நிகழ்வு இடத்திற்கு வந்த மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் காயமடைந்த எட்டு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நிகழ்வு இடத்தில் பலியான 3 பேரின் உடல்களையும் மாவட்ட காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அம்மாநில முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *