வெளி மாநில தொழிலாளர்கள் பிரச்சினை: சென்னையில் ஆலோசனைக் கூட்டம்

Viduthalai
1 Min Read

சென்னை,ஆக.18- தமிழ்நாட்டில் பணிபுரிந்து வரும் வெளிமாநிலத் தொழிலாளர்களின் பணிநிலை தொடர்பான ஆலோசனைக் கூட் டத்தில் பங்கேற்ற தொழிலாளர் நலத் துறை கூடுதல் ஆணையர் உ.உமாதேவி, தொழிலாளர்களின் உரிமைகள், பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

வெளி மாநிலத் தொழிலாளர் களின் பாதுகாப்பு, அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல், சட்டப்படியான உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற் படுத்தல் தொடர்பாக, சென்னை மண்டல அளவிலான ஆலோச னைக் கூட்டம் தேனாம்பேட்டை யில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியக் கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது.

தொழிலாளர் நலத் துறை கூடுதல் ஆணையர் உ.உமாதேவி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், இணை ஆணையர் தே.விமலநாதன், தொழிலாளர் ஆணையர் அலுவலக நிர்வாக அலுவலர் ந.வாசுகி முன்னிலை வகித்தனர்.

 இதில், கூடுதல் தொழி லாளர் ஆணையர் உ.உமாதேவி பேசும்போது, வெளிமாநிலத் தொழிலாளர்களின் சட்டப்படி யான உரிமைகள், அரசின் திட் டங்கள், தொழிற்சாலைகளில் பணி புரியும் வெளிமாநிலத் தொழிலா ளர்கள் தொடர்பான சட்ட உரி மைகள், தொழிலாளர்கள் விபத்தில் இறந்தால் அவர்களுக்கு வழங்கப் படும் இழப்பீடு உள்ளிட்டவற்றை விளக்கினார்.

குறைந்தபட்ச ஊதியம்: மேலும், வெளிமாநிலத் தொழிலாளர் களுக்கான குறைந்தபட்ச ஊதியம், 8 மணி நேர வேலை,குடும்பத்துடன் தங்கியுள்ள வெளிமாநிலத் தொழி லாளர்களுக்கு குடியிருப்பு, கழிப் பறை வசதி, பெண் பணியாளர்களின் பாதுகாப்பு, குழந்தைத் தொழிலா ளர்களை பணியில் ஈடுபடுத்தாமல் இருப்பது குறித்து கண்காணிக்கு மாறு அலுவலர்களுக்கு உத்தர விட்டார்.

இந்தக் கூட்டத்தில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள் ளூர், கடலூர், வேலூர், ராணிப் பேட்டை, திருப்பத்தூர், கள்ளக் குறிச்சி, விழுப்புரம், திருவண்ணா மலை மாவட்டங்களைச் சேர்ந்த, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது)மற்றும் காவல் கண்காணிப்பாளர்களின் பிரதிநிதிகள், தொழிலகப் பாது காப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலர்கள், தொழிலாளர் துறை அலுவலர்கள், வெளிமாநிலப் பணியாளர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்று, தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *