அப்பாடா, மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கு ஒப்பந்தப் புள்ளி வெளியீடாம்

Viduthalai
4 Min Read

அரசியல்

மதுரை,ஆக.18– மதுரை எய்ம்ஸ் கட்டிடப் பணிகளை மேற் கொள்ள தனியார் நிறுவனங் களிடமிருந்து ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. இரு கட்டங் களாக 33 மாதங்களில் பணிகளை முடிக்க வேண்டும் என ஒப்பந்த காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்திடம் எய்ம்ஸ் மருத் துவமனை கட்டுவதற்கான நிதி கிடைத்துள்ளதால் இந்த ஒப் பந்தப் புள்ளி வெளியிடப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தமிழ்நாட்டில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015ஆ-ம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி ஒன்றியஅரசு அறிவித்தது. இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் முதன்மை யானதாக கருதப்படும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைதமிழ்நாட்டிற்கு வருவதை அறிந்த தமிழ்நாடு மக்கள் உயர்தர சிகிச்சை விரை வில் கிடைக்கும் என்ற நம்பிக் கையில் இருந்தனர். ஆனால், இடம் தேர்வு செய்யது முதல் நிதி ஒதுக்குவது வரை, கடந்த 8 ஆண்டுகளாக மதுரை எய்ம்ஸ் கிடப்பில் போடப்பட்டது.

தஞ்சையை விரும்பிய அதிமுக.

. கடந்த 2018 ஜூனில் மதுரை மாவட்டம், தோப்பூரில் சுமார் 224.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என ஒன்றிய அரசு அறிவித்தது. ஆனால், அப்போதைய அதிமுக அரசு இந்த மருத்துவமனையை தஞ்சாவூர் அருகே கொண்டு செல்வதற்கு முடிவு செய்திருந்த தால் மதுரையில் அமையும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு பெரிய ஆர்வம் காட்டவில்லை. அதனால், நிலம் ஒதுக்கீட்டில் சிறிது காலம் இந்த மருத்துவ மனை திட்டப்பணிகள் தாமத மானது. அதன்பின் இடம் ஒப் படைக்கப்பட்டு, நிதி ஒதுக்குவது தாமதமானது.

இந்தியா முழுவதும் மற்ற மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைகளுக்கு ஒன்றிய அரசு நேரடியாக நிதி ஒதுக்கியது. ஆனால், தமிழ் நாட்டில் அமையும் மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு மட் டும் ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்திடம் கடன் கேட்டது. அந்த நிறுவனம், கடன் வழங்க ஒப்புக் கொண்டாலும், அதற் கான நடைமுறைகள், ஆய்வுப் பணிகளுக்கு தாமதம் செய்தது.

திமுகவின் வாக்குறுதி 

இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தல் வந்தநிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டுமானப் பணிகள் உடனடியாக தொடங் கும் என மதுரைக்கு பிரச்சாரத் திற்கு வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்து இருந்தனர். 

இதற்கிடையில், ஒன்றிய அரசு, மதுரை ‘எய்ம்ஸ்’ மருத் துவமனை கட்டுமானப்பணியை தொடங்காமலேயே, இந்த மருத்துவமனை கல்லுரிக்கான 50 எம்பிபிஎஸ் இடத்துக்கான மாணவர் சேர்க்கையை நடத்தி, மதுரையில் வகுப்பறை வசதி யில்லாததால் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில், தற்காலிகமாக வகுப்புகளை தொடங்கியது. தற்போது மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துக்கல்லூரி மாணவர்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் கடந்த 2 ஆண்டாக படித்துக் கொண்டிருக்கின்றனர். 

மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்தவமனையுடன் அறிவித்த நாட்டின் பிற மருத்துவமனை கட்டுமானப்பணிகள் முடிந்தும், தொடங்கியும் நடக்கும் நிலையில் 2022-இல் திறக்கப்பட வேண்டிய மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை மட்டுமே, பணிகள் எதுவுமே துவங்காமல், பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியதோடு நிற் கிறது.

பிரதமர் மோடி, அடிக்கல் நாட்டு விழாவில் 45 மாதங்களில் கட்டுமானப்பணிகள் நிறை வடையும் எனக் கூறிய நிலையில் மதுரை தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ ஒதுக்கிய 224.24 ஏக்கர் இடம் வெறும் பொட்டல்காடாக காட்சி அளிக்கிறது. அதனால், மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை தமிழ்நாடு அரசியல் தொடங்கி நாடாளுமன்றம் வரை பேசு பொருளாகி விவாதிக்கப்பட்டது.

தற்போது அடிக்கல் நாட்டப் பட்டு 3 ஆண்டுகள் கடந்த நிலையில் சுற்றுச்சுவர் மற்றும் நிர்வாக பணிகளுக்கான அலு வலகம் அமைக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தக் கோரல் வெளியீடு 

இந்நிலையில் நான்கரை ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்திடம் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான நிதி கிடைக்கப்பட்டுள்ளதால் 222.47 ஏக்கரில் மதுரை எய்ம்ஸ் கட்டட பணிகளுக்கான ஒப் பந்தக் கோரல் வெளியிடப் பட்டுள்ளது. அதன்படி இரு கட் டங்களாக பணிகள் நடைபெறும் எனவும், 33 மாதத்தில் பணிகளை முடிப்பதற்கான ஒப்பந்த காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

870 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை சிகிச்சை வளா கம் மற்றும் ஆயுர்வேத சிகிச் சைக்கான 30 படுக்கைகளுடன் கூடிய அறை, 150 எம்பிபிஎஸ் மாணாக்கர்கள் செவிலியர்கள் பயிலும் வகையிலான வகுப் பறைகள், அவர்களுக்கான தங்கு விடுதிகள், ஆடிட்டோரியம், உணவகம, மாணாக்ககர்களுக் கான தங்கு விடுதிகள், இயக்கு நருக்கான தங்கு இல்லம், வணிக வளாகம், , உணவகம், பணியா ளர்களுக்கான குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டட பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது.

கட்டட பணிகளுக்கான ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் 2026ஆம் ஆண்டுக்குள் பணிகள் முடியும் எனக் கூறிவரும் நிலையில் கட்டடப் பணிகள் எப்போதும் தொடங்கும் என்ப தற்கான கேள்விக்கான விடை எப்போது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இனியா வது, தென் மாவட்ட மக்களின் உயிர் காக்கும் உயர் சிகிச்சை தர காத்திருக்கும் ‘எய்ம்ஸ்’ மருத் துவமனை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அரசியல் செய் யாமல் விரைவாக கட்டுமானப் பணிகளை தொடங்கி முடிக்க வேண்டும் என எதிர்பார்க் கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *