ஒகேனக்கல் – காவிரியில் நீர்வரத்து 13,500 கனஅடியாக அதிகரிப்பு

Viduthalai
0 Min Read

தருமபுரி,ஆக.18– கருநாடக மாநில அணை களில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

குறிப்பாக கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

இதனால், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த 2 நாட்களாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

ஒகேனக்கல்லில் கடந்த 16-ஆம் தேதி காலை அளவீட்டின்போது விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலை அள வீட்டின்போது விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *