தென் மாவட்டங்களில் ஜாதிய பிரச்சினைகள் வராமல் தடுக்கப்படும்

2 Min Read

தென் மண்டல காவல்துறைத் தலைவராக பொறுப்பேற்ற பிரேம் ஆனந்த் பேட்டி

மதுரை, ஜூலை 18- தென்மாவட்டங்களில் வழிப்பறி, திருட்டு, கொலை போன்ற குற்ற நிகழ்வுகளை தடுக்க, சிறப்புக் கவனம் செலுத்தப்படும் என புதிய தென் மண்டல காவல்துறை தலைவர் பிரேம் ஆனந்த் சின்கா கூறினார்.

தென்மண்டல காவல்துறை தலைவராக பணிபுரிந்த என்.கண்ணன் சென்னைக்கு மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக புதிய தென் மண்டல காவல்துறை தலைவராக பிரேம் ஆனந்த் சின்கா நியமிக்கப்பட்டார். புதன்கிழமை அன்று மதுரையிலுள்ள அலுவலகத்தில் பொறுப்பேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை தலைவர் பிரேம் ஆனந்த் கூறியதாவது:

“தென் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றத் தடுப்பு, ஜாதிய பிரச்சினை வராமல் தடுக்கப்படும். பழிக்கு, பழி கொலை நடக்காமல் இருக்க, போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை தடுக்க, பழைய நடவடிக்கை தொடரும். இது தொடர்பான நிலுவை வழக்குகளை துரிதப்படுத்தி சம்பந்தப்பட்டோருக்கு உரிய தண்டனை பெற்று தரப்படும்.

நகர் புறம், கிராமங்களில் வழிப்பறி, திருட்டு, கொலை போன்ற குற்றச் நிகழ்வுகளை தடுக்க சிறப்பு கவனம் செலுத்தப்படும். நகர் பகுதி, நான்கு வழிச்சாலைகளில் விபத்துகளை குறைக்க முக்கியத்துவம் அளிக்கப்படும். நான்கு வழிச் சாலைகளில் 4 முனை சந்திப்பு பகுதியில் விபத்தைத் தடுக்க, வைக்கப்படும் இரும்புத் தடுப்புகளை (பேரிக்கார்டு) முறைப்படுத்தி வைக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்படும்.

குறிப்பாக காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வருவோரை இன்முகத்துடன் வரவேற்று, உரிய உதவி, நடவடிக்கை எடுக்கப்படும். இதில் காவல் நிலைய வரவேற்பாளர்கள் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படும். தென் மாவட்டத்திலுள்ள ரவுடிகள் குறித்த தகவல்கள் உள்ளன. இதன் மூலம் அவர்கள் கண்காணிக்கப்படும். தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட் டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அவர் மதுரை, ராமநாதபுரம் காவல்துறை துணைத் தலைவர் துரை, திண்டுக்கல் காவல்துறை துணைத் தலைவர் அபினவ் குமார், மதுரை எஸ்பி ஆனந்த் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். ஏற்கெனவே இவர், சிவகங்கை தேவகோட்டை, திருவாடனை, பெரம்பலூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் மதுரை நகரில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *