கோபி, ஜூலை 18- கோபி கழக மாவட்டத்தில் அரசுப் பணியில் இருந்து பணி நிறைவு பெற்ற தோழர்கள், திராவிடர் கழகத்தில் இணைந்த தோழர்கள், பகுத்தறிவாளர் கழகத்தில் இணைந்த தோழர்கள், ஆசிரியர்கள் அனைவரையும் வரவேற்று, பாராட்டும் விழா மற்றும் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் கோபி மாவட்ட காப்பாளர் இரா.சீனிவாசன் இல்லத்தில் 7.7.2024 அன்று கோபி மாவட்டத் தலைவர் ந.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் மா.கந்தசாமி தொடக்கவுரையாற்றினார். கழக சொற்பொழிவாளர் வெ.குமாரராஜா பாராட்டி சிறப்புரையாற்றினார்.
கோபி மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன், இரா.சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் க.யோகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரசுப் பணியில் பணி ஓய்வு பெற்றதால் பாராட்டி வர வேற்கப்பட்டவர்கள்:
அ.பொன்முகிலன், காப்பாளர், பெரியார் – அண்ணா நினைவகம், ஈரோடு. வெ.குணசேகரன், சாலைப் பணியாளர், கோபி.. ப.காசி விசுவநாதன், பணி- ஆய்வாளர், நீர்வளத்துறை, பவானி சாகர் அணை. பெ.கந்தசாமி, மருத்தவம் சாரா மேற்பார்வையாளர், நடுப் பாளையம்.
பகுத்தறிவாளர் கழகத்தில் இணைந்த ஆசிரியர்கள்
மு.வெள்ளைதுரை, (முதுநிலை ஆசிரியர்), க.பழனிச்சாமி, (ஆசிரி யர்), த.விஜயசங்கர் (உடற்க்ல்வி ஆசிரியர்), எஸ்.எஸ்.மாணிக்கம் (ஆசிரியர்), பொ.சாந்தி (தலைமை ஆசிரியை), சுமதி (ஆசிரியை), ப.நித்யா (ஆசிரியை), சா.சத்யாவதி (ஆசிரியை), க.சீதாலட்சுமி (ஆசிரியை), வீ.சென்னியங்கிரி (ஆசிரியர்), ப.அருள் (தலைமை ஆசிரியர்)
திராவிடர் கழகத்தில்
இணைந்த தோழர்கள்
1. பழனிச்சாமி (சதுமுகை), 2.கே.எம்.மூர்த்தி (கெம்ம நாயக்கன் பாளையம்), 3. தன்ராஜ் (சதுமுகை), 4. கே.கோவிந்தன் (நல்லாமூப்பனூர்), 5. நாகராஜ் (தத்தப்பள்ளி), 6. முருகேஷ் (சதுமுகை).
கலந்துரையாடல் கூட்டம்
திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் எனும் கழக அமைப்புகளை மேலும் வலுப்படுத்துவது எனவும், விடுதலை சந்தா அதிகம் சேர்ப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
ப.வெற்றிவேல் (இளைஞர் அணி துணைச் செயலாளர்) நன்றியுரையாற்றினார்.
சி.அறிவுச்செல்வி, சி.மதிவதனி, சீனு, தமிழ்ச்செல்வி, மதிவாணன், த.சிவபாரதி, மா.சூர்யா ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.