நாங்குநேரி எதிரொலி: 9 தெருக்களின் ஜாதி பெயர்களை மாற்றி கிராம சபையில் தீர்மானம்

Viduthalai
1 Min Read

தூத்துக்குடி, ஆக. 19 – தூத்துக்குடி மேல ஆத் தூர் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியர், நமது மாவட்டத்தில் ஜாதிகளின் பெயரில் உள்ள தெருக்களுக்கு தலைவர்களின் பெயர்கள், அப்துல்கலாம் போன்ற அறிவியலாளர்கள் பெயர்களை வைக்கலாம். நாங்கு நேரியில் ஒரு சங்கடமான செயல் நடை பெற்றுள்ளது. 

தமிழ்நாடு முதலமைச்சர் மனிதத்தன்மையுடன் வாழ வேண்டும் என்று அறிவுறுத்தி யிருக்கிறார். நமது தெருக்களுக்கு ஜாதி பெயர் களை நீக்கிவிட்டு சுதந்திரப்போராட்ட வீரர் களின் பெயரை சூட்டினால் தமிழ் நாட்டிற்கே மேலஆத்தூர் ஊராட்சி முன்னு தாரணமாக திகழும் என்றார். 

இதைத் தொடர்ந்து, தெற்கு ஆத்தூர் நாடார் தெரு காமராஜர் தெருவாகவும், பம்பையாநகர் காமராஜர் தெற்கு தெரு வாகவும், தெற்கு ஆத் தூர் தேவர் தெரு  பசும்பொன் தெருவாகவும், சேனையர் தெரு சிறீஉச்சினிமாகாளி அம்மன் கோவில் தெருவாகவும், யாதவர் தெரு  சடைச்சி அம்மன் கோவில் தெருவாகவும், பரதர் தெரு கொறுவநல்லூர் கித்தேரியம்மன் கோவில் தெருவாகவும், கொறுவநல்லூர் நாடார் தெரு காமராஜர் நகராகவும், கொறுவநல்லூர் எஸ்.சி. தெரு டாக்டர்  அம்பேத்கர் நகராகவும், கொறுவ நல்லூர் தேவர் தெரு நேதாஜி நகராகவும் மாற் றம் செய்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இந்தப் பெயர்கள் உட னடியாக அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *