கோரக்பூர், ஜூலை 17- உத்தரப்பிரதேசம் கோரக்பூரில் உள்ள கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் மாணவர்தேர்தல்தொடர்பாக கூட்டம் நடைபெற்றது.
ஒரு கட்டத்தில் மாணவர் அமைப்பினரின் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரிவான ஏபிவிபி அமைப்பு தேர்தல் தொடர்பாக பிரச்சினையைக் கிளப்பியது,
இதனை அடுத்து நிர்வாகம் காவல்துறையினரை பாதுகாப்பிற்கு வரவழைத்தது.
இதனால்கோபமடைந்த ஏபிவிபி அமைப்பினர் துணைவேந்தரை தாக்க முற்பட்டனர். இதனைப் பார்த்த ஆய்வாளர் தலைமையில் வந்த காவலர்கள் தடுக்கவே காவலர்களைத்தாக்கினர்.
இதில் ஆய்வாளர் மற்றும் சில காவலர்கள் லேசான காயமடைந்தனர். நிலைமை விபரீதமாவதைக் கண்ட துணைவேந்தர் மற்றும் பதிவாளர் இவருவரையும் பாதுகாவலர்கள் வெளியே அழைத்து வந்த போது அவர்களைத்தாக்கி துணை வேந்தரையும் பதிவாளரையும் தாக்கினர்.
இது தொடர்பாக சந்தீப் காஸா என்ற மாணவர் அந்நிகழ்வு தொடர் பான காணொலியை டுவீட்டரில் பகிர்ந்தார்.
அதில் ஏபிவிபி உறுப்பினர்கள் முதலில் காவலர்களைத் தாக்கு கின்றனர்.
பின்னர் அவர்கள் பல்கலைக் கழக அதிகாரிகளின் அறைக்குள் சென்றனர், அவர்களை இழுத்துக் கொண்டு வந்து, காலால் உதைக் கின்றனர்.
பின்னர் இடதுசாரி மாணவர் அமைப்பினர் ஒன்று கூடி காவலர்கள் அனைவரையும் ஏ.பி.வி.பி உறுப்பினர்களிடமிருந்து காப்பாற்றி கதவுகளை மூடினர்.
இந்த தாக்குதல் தொடர்பாக கோரக்பூர் பல்கலைநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை துவங்கி உள்ளது
ஏபிவிபி அமைப்பினர் டில்லி பல்கலைக்கழகம், ஜவகர்லால் பலகலைக்கழகம், போபால் பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து தற்போது சாமியார் முதலமைச்சரின் சொந்த தொகுதியான கோரக்பூரில் துணைவேந்தரை தாக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.