முதல் குழு
கரூர் மாவட்டத்தில் குளித்தலை கிருஷ்ணராயபுரம் கரூர் திருமா நிலையூர் வேலாயுதம்பாளையம் ஆகிய நான்கு இடங்களில் நீட் தேர்வு ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி மாணவர் கழகம் சார்பில் இருசக்கர வாகன பரப்புரை பயணம் நடைபெற்றன.
1),கரூர் மாவட்டம் குளித்தலையில் இருசக்கர வாகன பரப்புரையில் வந்த இளைஞர் அணி மாணவர் கழக தோழர்களை கரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் வரவேற்று நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாநில மாணவர் கழக செயலாளர் செந்தூரப் பாண்டியன் மாநில சட்டக் கல்லூரி மாணவர் மு.இளமாறன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். குளித்தலை திராவிடர் கழக பொறுப்பாளர் சந்தான பாண்டியன், மாவட்டத் தலைவர் குமாரசாமி, செயலாளர் ம. காளிமுத்து, காப்பாளர் வே. ராஜு, மாநில சட்டத்துறை துணைத் தலைவர் மு க ராஜசேகரன், மாநில இளைஞரணி துணை செயலாளர் ம. ஜெகநாதன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் அலெக்ஸ், கார்த்தி விக்னேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் குளித்தலை திமுக நகர பொருளாளர் தமிழரசன் நகரத் துணைச் செயலாளர் செந்தில்குமார் கவுன்சிலர் சரவணன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
2),கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெற்ற பரப்புரையில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய நீட் தேர்வு விலக்கு புத்தகம் 100 பெற்றுக்கொண்டு ரூபாய் ஆயிரம் வழங்கி சிறப்புரையாற்றினார். உடன் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கட்டளை ரவி ராஜா கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி தலைவர் மற்றும் கட்டளை வைரவன் பொதுக்குழு உறுப்பினர்,கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தலைவர்பெருமாள், மாணவரணி பெரியார் செல்வம் ராமலிங்கம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
3), கரூர் திருமாநிலையூர் தந்தை பெரியாரின் முழு உருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசு வலியுறுத்தி நடைபெற்ற பரப்புரையில் கரூர் மாநகராட்சி கவுன்சிலர் வசுமதி பிரபு மேனாள் மாவட்ட துணைச் செயலாளர் இரா பிரபு ஆகியோர் பரப்புரை குழுவில் வந்த இளைஞர் அணி தோழருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் சே அன்பு, த.த,கார்த்தி , நகரச் செயலாளர் ம. சதாசிவம், பகுத்தறிவாளர் கழக செயலாளர் பொம்மன்,நகர இளைஞரணி சுரேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் காந்திகிராமம் ராஜா,மற்றும் திமுக திராவிடர் கழகத் தோழர்கள் ஆதித்தமிழர் பேரவை தமிழ் புலிகள் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
4), வேலாயுதம்பாளையம் நால்ரோடு அருகே நடைபெற்ற நீட் தேர்வு விலக்கு பிரச்சார பரப்புரை கூட்டத்தில் மாநில மாணவர் கழக செயலாளர் செந்தூரப் பாண்டியன், மாநில சட்டக் கல்லூரி மு இளமாறன் ஆகியோர்கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.நிகழ்ச்சியில் கரூர் ஒன்றிய தலைவர் பழனிச்சாமி கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.புகலூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் அவர்கள் கலந்து கொண்டு 100 புத்தகங்களை ரூ 1000 கொடுத்து வாங்கி சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சியில்திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் இந்திய கூட்டணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் இறுதியாக மாவட்ட தலைவர் குமாரசாமி நன்றியுரை கூறினார்.
14.07.2024 காலை 9.00 மணி அளவில் கீழவாளாடி பகுதியில் நடைபெற்ற இருசக்கர வாகன பரப்புரை பயணத்தில் லால்குடி மாவட்ட தலைவர் தே.வால்டேர் 1000 ரூபாய்க்கு புத்தகங்களை பயணத் தலைவர் இரா. செந்தூரப் பாண்டியனிடம் பெற்றுக்கொண்டார். தலைமை கழக அமைப்பாளர் ஆல்பர்ட் உடனிருந்தார்.
14.07.2024 காலை 9.00 மணி அளவில் கீழவாளாடி பகுதியில் நடைபெற்ற இருசக்கர வாகன பரப்புரை பயணத்தில் கீழ்வாளாடி மூ.அன்புராஜா 1000 ரூபாய்க்கு புத்தகங்களை பயணத் தலைவர் இரா. செந்தூரப்பாண்டியனிடம் பெற்றுக்கொண்டார். தலைமை கழக அமைப்பாளர் ஆல்பர்ட், லால்குடி மாவட்ட தலைவர் தே.வால்டர் ஆகியோர் உடனிருந்தார்கள்.
இரண்டாம் குழு
கும்பகோணம் கழக மாவட்டம் வலங்கைமானில் 14.07.2024 ஞாயிறு காலை 9.00 மணிக்கு நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி மற்றும் திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர பரப்புரை பயணத்தை வலங்கைமான் ஒன்றிய எல்லையில் மாவட்ட காப்பாளர் வே.கோவிந்தன், மாவட்ட செயலாளர் சு.துரைராசு மற்றும் வலங்கைமான் விசய பூபாலன் முன்னின்று வரவேற்று அழைத்து வந்தனர்..
வலங்கைமான் மகா மாரியம்மன் கோவில் எதிரில் ஒன்றியத்தின் சார்பில் பரப்புரை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஒன்றிய திராவிடர் கழக தலைவர் க.பவானி சங்கர் தலைமை ஏற்றார்.
வருகை தந்த அனைவரையும் ஒன்றிய பொறுப்பாளர் சி.இராமச்சந்திரன் வரவேற்றுப் பேசினார்.
நீட் தேர்வின் பாதிப்புகளை திராவிட முன்னேற்ற கழக வலங்கைமான் ஒன்றிய செயலாளர் கோ.தெட்சிணாமூர்த்தி எடுத்துரைத்துடன், திராவிடர் கழகம் நடத்தும் இப்பிரச்சாரம் நம் மக்களுக்கானது, அனைவரும் ஒன்று திரண்டு நீட்டை ஒழிப்போம் வாரீர் என்ற வேண்டுகோளோடு முடித்தார்.
தொடந்து குடந்தை மாநகர திராவிடர் கழக தலைவர் வழக்குரைஞர் பீ.இரமேஷ் நீட் எப்படி எல்லாம் நம் இனம் முன்னேறுவதை தடுக்கிறது என்பதையும், திராவிடர் கழகம் மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காகவே இப்பரப்புரை பயணத்தினை செய்கிறது என்பதையும் விளக்கி பேசினார். நீட் பற்றிய வரலாற்றை தலைமை கழக அமைப்பாளர் குடந்தை க.குருசாமி தெளிவாக எடுத்துரைத்தார். ஏன் இப்பயணம் என்பதையும் ஆசிரியர் அவர்களது செயல்பாடுகளையும் எடுத்துரைத்தார்.
நீட் தேர்வு எப்படி பாதிக்கிறது என்பதை எடுத்துச் சொன்ன கழக சொற்பொழிவாளர் தேவ.நர்மதா பரப்புரை பயண நோக்கத்தை எடுத்துரைத்தார்.
மாவட்ட தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி வலங்கைமானில் தோழர்கள் எப்படி எல்லாம் இயக்கத்தை கட்டிக்காத்தார்கள் என்பதை பட்டியலிட்டு காட்டினார். நீட் நமக்கு எதிரானது என்பதையும் விளக்கினார். வலங்கைமான் நகர திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் சிவனேசன் நீட் தேர்வுக்கு கண்டனம் தெரிவித்து உரையாற்றினார்.
பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வி.மோகன் நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களது ஆணைப்படி தமிழ்நாட்டின் 5 இடங்களிலிருந்து பரப்புரை பயணம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ஆசிரியர் அறிக்கையை படியுங்கள்! உண்மையை அறிந்துகொள்ளுங்கள் எனக் கூறி முடித்தார். இறுதியாக நேரத்தின் அருமை கருதி பவானி சங்கர் நன்றி கூறினார்.
முன்னதாக பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் பரப்புரை குழுவினர் செலவுக்கு பொதுச்செயலாளர் வி.மோகன் ரூ.1000/- வழங்கினார். திமுக ஒன்றிய செயலாளர் கோ. தெட்சிணாமூர்த்தி ரூ.500/-க்கு நூல்கள் வாங்கிக்கொண்டார்.
தொடர்ந்து வலங்கைமான் ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் கோ.தெட்சிணாமூர்த்தி பயணக்குழு தலைவர் நாத்திக பொன்முடி, ஒருங்கிணைப்பாளர் உமாநாத், சொற்பொழிவாளர் தேவ.நர்மதா ஆகியோருக்கும், பரப்புரை பயணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் துண்டு அணிவித்து சிறப்பு செய்தார்.. பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் க. திருஞானசம்பந்தம் பரப்புரை குழு தலைவர், ஒருங்கிணைப்பாளருக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்தார். ஒன்றிய இந்திய பொதுவுடைமை இயக்க ஒன்றிய செயலாளர் செந்தில் பயணக்குழு தலைவர், ஒருங்கிணைப்பாளருக்கு சிறப்பு செய்தார்.
வலங்கைமானில் அதிக மக்கள் சந்திக்குமிடத்தில் பரப்புரை மிகுந்த உற்சாகத்துடன் செய்யப்பட்டது. கோயிலுக்கு வந்த பக்தர்கள் கூட நின்று உரையை கேட்டு சென்றனர். ஆசிரியர் அவர்களது அறிக்கயை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி படித்தனர். வலங்கைமான் காவல்துறை சிறப்பாக போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி கூட்டம் நடைபெற நடவடிக்கை எடுத்திருந்தனர். தொடர்ந்து பரப்புரை குழுவினர் நீடாமங்கலம் நோக்கிப் புறப்பட்டனர்.
இப்பரப்புரை பயணத்தில் கும்பகோணம் மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர்கள் தமிழ்மணி, மகாலிங்கம், அசூர் செல்வம், தொழிலாளர் அணி பொறுப்பாளர் பெரியார் கண்ணன், வலங்கைமான் திராவிடர் கழக பொறுப்பாளர்கள் ஆண்டாங்கோயில் வீரமணி, கோவிந்தகுடி அசோக்ராஜ், மதகரம் கரிகாலன், ஆண்டாங்கோயில் பிரவீன், நாச்சியார்கோவில் குணா, சோலை மாரியப்பன், திருவாரூர் சுரேஷ், ஆகியோர் பங்கேற்றார்கள். மாணவர் கழகத் தோழர்கள் பலரும் பங்கேற்றார்கள்.
மூன்றாவது குழு
நீட் ஒழிப்பு பிரச்சார வாகன பரப்புரை பயணம் மூன்றாவது குழு அய்ந்தாம் நாளில் அரூர் பேருந்து நிலையம், மொரப்பூர் பேருந்து நிலையம், குஞ்சாண்டி பட்டியில் பரப்புரை ஆகிய இடங்களில் கழக துணைப் பொதுச் செயலாளர்
சே.மெ.மதிவதனி உரையாற்றினார்.
நான்காம் குழு
சேலம் மாவட்டம் சங்ககிரியில் 30க்கும் மேற்பட்ட தோழர்கள், பரப்புரை படையை வரவேற்றனர். சங்ககிரி பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெற்ற இக்கூட்டத்திற்கு பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் வீரமணி ராஜி தலைமை தாங்கினார். கழக காப்பாளர் கவிஞர் சி.சுப்பிரமணியன், தலைமை கழக அமைப்பாளர் காநா பாலு, மேட்டூர் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் சவுந்தரராஜன், மேட்டூர் கலைவாணன், பகுத்தறிவாளர் கழகம் சுரேஷ்குமார், கோவை அன்புமணி உள்ளிட்ட தோழர்கள் முன்னிலை வகித்தனர். கழக சொற்பொழிவாளர் த.மு.யாழ் திலீபன் சிறப்புரையாற்றினார். வழக்குரைஞர் கல்பனா நன்றி உரையாற்றினார்.
– – – – –
மேட்டூர் கழக மாவட்டத்திற்கு உட்பட்ட மேட்டூர் சின்ன பார்கில் நீட் எதிர்ப்பு பரப்புரை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் க.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். சி.சுப்பிரமணியன், பெ.சவுந்தரராஜன், உல.கென்னடி, சி.மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக நகர மன்ற தலைவர் கோ.சந்திரா, திமுக சேலம் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் பிரான்சிஸ் சேவியர், வீசிக சேலம் மாவட்ட செயலாளர் மேட்டூர் மெய்யழகன், மேட்டூர் நகர காங்கிரஸ் அமைப்பாளர் பாலசுப்பிரமணி, சிபிஅய்எம் சேலம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி இ இ இ இளங்கோ, சிபிஅய் சேலம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. வி. ராஜேந்திரன், மதிமுக நகர செயலாளர் சீனிவாசன், திராவிடர் பண்பாட்டு நடுவம் தலைவர் முல்லைவேந்தன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கழகப் பேச்சாளர் த.மு.யாழ் திலீபன் சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்வில் மேட்டூர் நகர செயலாளர் நேரு, மேட்டூர் சீனிவாசன், மேச்சேரி ராஜேந்திரன், மேட்டூர் குமார், மேச்சேரி கபிலன், மேட்டூர் உதய பாஸ்கர், மேட்டூர் செல்லதுரை உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர். இறுதியாக மேட்டூர் கழகத் தலைவர் கலையரசன் நன்றி கூறினார்.
அய்ந்தாம் குழு
நீட் தேர்வு எதிர்ப்பு இருசக்கர பிரச்சார பரப்புரை பயணம் சென்னையிலிருந்து புறப்பட்ட குழு 13.07.2024 சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் ஆம்பூர் நகர் வந்தடைந்தது. அக் குழுவை சோமலாபரம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தி. க. மாதனூர் ஒன்றிய தலைவர் தலைமையில் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டது. அங்கிருந்து ஆம்பூர் நகரில் மாவட்ட செயலாளர் பெ. கலைவாணன் தலைமையில், மாநில இளைஞரணி துணை செயலாளர் சி. ஏ. சிற்றரசன் வரவேற்பில், ஆம்பூர் நகர தலைவர் ரவி, செயலாளர் இளங்கோ, மாதனூர் ஒன்றிய தலைவர் வெற்றி ஆகியோர்கள் முன்னணியில் பரப்புரை நடந்தது.இதில் தோழமை இயக்கங்கள் ம. தி. மு. க, வி. சி. க, மனித நேய மக்கள் கட்சி ஆகியோர்கள் பங்கேற்றனர். மாநில துணை பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் சிறப்புரையாற்றினார்.
நீட் தேர்வு ரத்து ஏன்? என்ற புத்தகத்தை மாவட்ட செயலாளர் பெ. கலைவாணன் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் சி. ஏ. சிற்றரசன், மாதனூர் ஒன்றிய செயலாளர் தலா ரூ. 500 கொடுத்து பெற்றனர்.
இப் பரப்புரையில் கழக தோழர்கள் அண்ணா. சரவணன் மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச் செயலாளர், அ. உலகன் மாவட்ட தலைவர் மாணவர் கழகம், தங்க அசோகன் மாவட்ட துணைத் தலைவர், சி. தமிழ்ச்செல்வன், மாவட்ட தலைவர் ப. க., காளிதாஸ் நகர தலைவர், ஏ. டி. ஜி. சித்தார்த்தன் நகர செயலாளர், வ. புரட்சி மாவட்ட துணைத் தலைவர் விடுதலை வாசகர் வட்டம், பெ. ரா. கனகராஜ் கந்திலி ஒன்றிய தலைவர், ரா. நாகராசன் கந்திலி ஒன்றிய செயலாளர், தே. பழனிசாமி மாவட்ட செயலாளர் இளைஞரணி, ம. சங்கர் மாவட்ட துணைத் தலைவர் இளைஞரணி, ப. அஜித் மாவட்ட துணைச்செயலாளர்இளைஞரணி, கே. ராஜேந்திரன் சோலையார்பேட்டை ஒன்றிய தலைவர், தா. பாண்டியன் சோலையார்பேட்டை ஒன்றிய செயலாளர், ப. நாத்திகன் மாவட்ட துணைச் செயலாளர், இரா. கற்பகவள்ளி மாவட்ட தலைவர் மகளிர் பாசறை, சி. சபரிதா மாவட்ட செயலாளர் மகளிர் பாசறை, தி. நவநீதம் மாவட்ட அமைப்பாளர் மகளிர் பாசறை, கோ. திருப்பதி மாவட்ட தலைவர் ப.ஆசிரியரணி, குமரவேல் மாவட்ட செயலாளர் ப. ஆசிரியரணி, ஆர். பன்னீர் மாவட்ட செயலாளர் தொழிலாளரணி, கே. மோகன் மாவட்ட அமைப்பாளர் தொழிலாளரணி, எம். ஞானபிரகாசம் மாவட்ட தலைவர் விடுதலை வாசகர் வட்டம், குமரவேல் மாவட்டச் செயலாளர் விடுதலை வாசகர் வட்டம், பெருமாள்சாமி மாவட்ட துணைச்செயலாளர் விடுதலை வாசகர் வட்டம், ஆ. ப. செல்வராஜ் மாவட்ட துணை அமைப்பாளர் விடுதலை வாசகர் வட்டம், இசை பிரியன் இளைஞரணி, சிவக்குமார் நகரதலைவர் சோலையார்பேட்டை, ஜே.எம்.பி.வள்ளுவன் நகர அமைப்பாளர் சோலையார்பேட்டை, லட்சுமணன் சோலையார்பேட்டை பொறுப்பாளர், நரசிம்மன் நகர காப்பாளர், அன்புச் சேரன் நகர தலைவர் வாணியம்பாடி, மு. வெற்றி மாதனூர் ஒன்றிய தலைவர், சே. வெங்கடேசன்மாதனூர் ஒன்றிய செயலாளர், வே. அன்பு மாவட்ட செயலாளர் ப. க, எம். என். அன்பழகன்மாவட்ட அமைப்பாளர் விடுதலை வாசகர் வட்டம், நா. சுப்புலட்சுமி மாவட்ட ப. க. எழுத்தாளர் மன்றம், எஸ். சுரேஷ் குமார் மாவட்ட தலைவர் இளைஞரணி, ரவி ஆம்பூர் நகர தலைவர், இளங்கோ ஆம்பூர், ராஜ சேகர் கிரி சமுத்திரம் கிளை தலைவர், கோ. சங்கர் சுந்தரம் பள்ளி ஒன்றிய தலைவர், சி. சந்தோஷ் குமார் காக்கங்கரை ஆகியோர் பங்கேற்றனர்.
– – – – –
நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் 5 முனைகளிலிருந்து தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரைப் பயண குழுவினரை ஒசூர் மாவட்ட எல்லையான சூளகிரி மில் திராவிட மாணவர் கழக செயலாளர் க.கா.சித்தாந்தன் தலைமையில் வரவேற்று சூளகிரி ரவுண்டானாவில் நீட் தேர்வை ரத்து செய்க்கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி ஒலி முழக்கம் எழுப்பப்பட்டது.தொடர்ந்து திமுக ஒன்றிய செயலாளர் கே.சி.பாக்கியராஜ்,விடுதலை சிறுத்தைகள் கட்சி இளம் பாசறை மாவட்ட அமைப்பாளர் ஜெய்சங்கர் சமுக நீதி மாணவர் அமைப்பு அ.கலீலுல்லா,மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் முகமது உமர் ஆகியோர் குழுவினரை பாராட்டி பயன்பாட்டை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்து ஒசூரை நோக்கி வழியனுப்பி வைத்தனர்.ஒசூரில் நீட் ஒழிப்பு பயண பரப்புரை குழுவினரை திமுக மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ், மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா, காங்கிரஸ் மாநகர தலைவர் தியாகராசன்,தமிழக மாணவர் இயக்கம் செல்வராஜ், புரட்சி கரதொழிலாளர் முன்னணி மாணிக்கவாசகம் ஆகியோர் காத்திருந்து பயண குழுவினரை வரவேற்று பயனாடை அணிவித்து வாழ்த்துகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் தலைமையில் மாநில துணை பொதுச்செயலாளர் பிரின்சு என்னெரசு பெரியார் 20 நிமிடம் உரையாற்றினார்.திமுக மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் நீட் ஒழிப்பு கையேடு 100 பிரதிகளும், மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா 50 பிரதிகளும்,தலைமை செயற்குழு உறுப்பினர் கவிஞர் எல்லோரா மணி 50 பிரதிகளும் பெற்றுக் கொண்டு பயணக் குழுவினரை பாதுகாப்புடன் செல்லுங்கள் என வாழ்த்துக்கள் தெரிவித்து இராகோட்டைக்கு வழி அனுப்பி வைத்தனர்.இராயகோட்டை பேருந்து நிலையத்தில் பயண குழுவினரை காங்கிரஸ் கட்சி கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கோபிநாத், மாவட்ட தலைவர் எஸ்.ஏ.முரளிதரன், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஜாகீர்ஆலம், சிபிஅய் ஒன்றிய செயலாளர் ஆர்.எம்.முருகன்,சிபிஎம் கட்சி தூர்வாசன், காங்கிரஸ் வட்டார தலைவர் சுந்தர்ராஜ்,மே17 இயக்கம் மோகன்ராஜ் விடுதலை சிறுத்தைகள் கட்சி கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தெகுதி செயலாளர் செந்தமிழ் மக்கள் அதிகாரம் தோழர் ரஞ்சித் குமார் ஆகியோர் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் தலைமையில் வரவேற்றனர்.மாவட்ட இளைஞரணி தலைவர் டார்வின் பேரறிவு அனைவரையும் வரவேற்றார்.
திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் அது முற்றிலும் ஒழிக்க பட வேண்டும் என்பதை வலியுறுத்தி உரையாற்றினார்.
முடிவில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற கே.கோபிநாத் அவர்களுக்கு மாநில துணை பொதுச்செயலாளர் பிரின்சு சால்வை போர்த்தி திராவிடர் கழகம் சார்பில் வாழ்த்துகள் தெரிவித்தார்.நீட் ஒழிப்பு கையேடுகளை காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் முரளிதரன், சிபிஅய் கட்சி ஒன்றிய செயலாளர் ஆர்.எம்.முருகன் சமுக செயல்பாட்டாளர் முகமது அலாதீன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் திராவிடர் கழக தலைமை ஒருங்கிணைப் பாளர் ஊமை ஜெயராமன், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி, மாவட்ட மகளிரணி தலைவர் செல்வி மகளிர் பாசறை மாவட்ட தலைவர் கோ.கண்மணி,மேனாள் மாநில சட்ட கல்லூரி திராவிட மாணவர் கழக அமைப்பாளர் க.கா.வெற்றி, மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி,பொதுக்குழு உறுப்பினர் அ.செ.செல்வம், ஒன்றிய அமைப்பாளர் து.ரமேஷ், திராவிட மாணவர் கழகம் மாவட்ட தலைவர் செந்தமிழ் பகுத்தறிவு, செயலாளர் க.கா.சித்தாந்தன்,தருன்,சிதருன்,கேகுல்குமார்,வாசு, ஒசூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் செ.பேரரசன், அசோக்குமார்,சதீஸ், அரவிந்த்,பிரசாந்குமார், கவுதம், முருகன்,வினாயகர்,தாமஸ்,மாலா, விடுதலை சிறுத்தைகள் கட்சி இளைஊடக பிரிவு இளையராஜா, மற்றும் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி,மே17இயக்கம், மனித நேய ஜனநாயக கட்சி, தமிழக மாணவர் இயக்கம், புரட்சிகர தொழிலாளர் முன்னணி தோழர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.