கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

15.7.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நன்றி: கூட்டுக் கடமை இருப்பதாக கடிதம் வாயிலாக தகவல்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக கவுரவ் கோகாய். அவைத் தலைவருக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா கடிதம் அனுப்பினார்.
* ஏழு மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத்திற்கான 13 இடைத் தேர்தலில் பாஜகவுக்கு 2 இரண்டு இடங்களே கிடைத்தன. மோடி ஆட்சியின் மீது மக்கள் கோபம் இன்னும் தணியவில்லை என்கிறது தலையங்க செய்தி.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* கார்ப்பரேட் வரி குறைப்பு பெரும் பணக்காரர்களை ரூ.2 லட்சம் கோடியால் வளப்படுத்தியது; அதிக வரி விதிப்பால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்: காங்கிரஸ் குற்றச்சாட்டு.
தி டெலிகிராப்:
* மோடி அரசில் புதிய மக்களவை உறுப்பினர்களை அமைச்சராக்கவில்லை; பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மீது அதிருப்தி.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ‘கிரீமிலேயர்’ வருமான வரம்பு கடந்த 2017 ஆம் ஆண்டில் – ஆண்டுக்கு ரூ.8 லட்சமாக திருத்தப்பட்டது. அதை ரூ.15 லட்சமாக உயர்த்த அகில இந்திய பிற்படுத் தப்பட்டோர் கூட்டமைப்பு மீண்டும் வலியுறுத்தல்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *