கடவுள் சக்தி அவ்வளவுதானா?

1 Min Read

‘அன்னதானம்’ கொடுக்கும் போது பக்தர் பலி

திருச்சி, ஆக. 20 திருச்சி மாவட்டம், சோம ரசம்பேட்டை அருகே உள்ள பள்ளக்காடு அம்மாசி தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 24). இவர் கடந்த 13-ஆம் தேதி கரூர் மாவட்டம் ஆர்.டி.மலை பகுதியில் உள்ள கரையூரான் நீலமேகம் கோவிலில் நடந்த பூஜையில் கலந்து கொண்டார். 

இந்த நிலையில் கோவிலில் நடந்து கொண்டிருந்த ‘அன்னதான’த்தில் பக்தர்களுக்கு உணவு பரிமாறும் வேலையில் பார்த்திபன் ஈடுபட்டிருந்தார். அங்கிருந்த ஒரு அண்டாவில் சாதத்தை எடுத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி அருகில் சூடாக இருந்த சாம்பார் அண்டாவில் தவறி விழுந்தார்.

இதில் பலத்த காயம் அடைந்த பார்த்திபனை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 மருத்துவ அவசர ஊர்தி மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி   பார்த்திபன் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து பார்த்திபனின் தந்தை ரவிக்குமார் கொடுத்த புகாரின்பேரில், தோகை மலை காவல்துறை ஆய்வாளர் ராஜ்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த பார்த்திபனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *